என்னுடைய பகல்நேர பேருந்து பயணங்களிலும் என்னருகில் அமர்ந்து எந்தன்தோள் சாய்ந்து நீயில்லாத வானத்தை என்னிடம் கண்ணில்காட்டி காதில் ரகசியம்கூறி - விண்ணை ரசிக்க சொல்ன்கிறாய்...
நான் நடந்துசெல்லும் சாலையின் ஓரங்களிலும் என்ஒற்றை விரல்பிடித்து என்னோடு நடைபயில்கின்றாய் சிலசமயம் உன்னிடையை என்கைகள் வளைத்து இதமாய் அரவணைத்து - நடக்கும்படி என்னை நீயே மாற்றுகின்றாய்....
நான் உண்பதற்கு செல்லும் உணவங்களுக்கு எனக்கு முன்னால் போட்டியிட்டு செல்ன்கிறாய்... உனக்கு பிடித்ததை எனக்கும்.. எனக்கு பிடித்ததை உனக்கும்... கொண்டுவர சொல்லி அன்போடு உணவையும் ஊட்டிவிட்டும் ஊட்டிவிட - வார்த்தையில் சொல்லியும் மகிழ்கின்றாய்...
வான் தொலைவில் நீயிருக்கும் போதே இத்தனை மாற்றங்களை என்னுள் புகுத்துகின்றாய்... என்னை காண்பதற்கு ஒருவேளை பூமிக்கு இறங்கி வந்தால் - என்னவாகி போவேன் உன்னால்?
No comments:
Post a Comment