Pages

யானையே!!!

நேற்றுவரை...
மைசூர் என்றால்
தசரா ஞாபகம்
தசரா என்றால்
உந்தன் ஞாபகம்

நீ என்றால்
உன்னழகு ஞாபாகம்
உன்னழகு என்றால்
காட்சிகள்பல ஞாபகம்

இன்றும்...
உந்தன் ஞாபகம்...
ஆனால் கொள்ளையடித்த
உன்னழகு கொலைசெய்ய
துவங்கியது ஏனோ?

காட்டை நாங்கள்
ஆக்கிரமிக்க தொடங்கியதால்
காட்டைகாக்கும் பொருட்டு
ஒருநாள் அடையாள
போராட்ட சின்னமாய்
நாட்டிற்குள் புகுந்தீரோ?
காட்டிற்குள் மரத்தை
முறிக்கும் நீங்கள்...
நாட்டிற்குள் வாகனத்தை
உடைத்தது ஏனோ?
செல்லும் பாதையில்
தடையாக இருந்ததாலோ? - எங்களும்
ரெளடிதனம் பண்ணதெரியும்
என்பதை காட்டவோ?

பணப்பெட்டி இயந்திரத்துக்கு
காவலன் அவன்...
உங்கள் தேவையது இல்லாதபோது
அவனை கொன்றதுஏனோ?
மனிதர்கள் நாங்கள்
பலபேர் மிருகமாகிறோம் - மிருகம்
நீங்கள் மனிதர்கள்போல்
மாறியதும் ஏனோ?

வாய்பேசும் மனிதனையும்
வாய்பேசா உன்னைபோன்ற
கால்நடையும் குத்தி
கொல்ல காரணமெதுவோ?

- sure

No comments:

Post a Comment