Pages

மனம் மாறிய வேளை...

என்கனவில் அவள் வந்தாள்
என்னருகில் மெல்ல அமர்ந்தாள்
என்னையே உனக்கு தந்துவிட்டேன்
உன்முன்னே நானடிமையென நின்றேன்...

என்னைபார்த்து என்னிடம் கேட்டாள்
என்னை என்னவெல்லாம் செய்யபோகிறாயென்று?
உன்னை என்னவெல்லாம் செய்யவேண்டுமென்று
சொல்லென்றேன் ஒவ்வொன்றாய் என்காதில்...

நாணலாய் வெட்கத்தில் தலைகுனிந்தாள்
பெண்ணினம் சொல்லிடமறுக்கும் பதில்தான்
ஆணினம் செய்திடநினைக்கும் செயல்தான்
என்றென மனதுக்குள் எண்ணிக்கொண்டேன்...

நீநினைக்கும் எந்தவொரு ஆசையையும்
நிறைவேற்றிட என்மனம் துடிப்பதையும்
இரட்டிப்பாய் செய்வித்து உன்னை
வீழ்த்திட நினைப்பதையும் அறிந்திடுஎன்றேன்...

என்விரல் பிடித்து
என்கேசம் கோதி
அவளிதழ் அசைய
தென்றல் காற்றாய்
எண்ணங்களை ராகமாக்கி
இசையாய் ஒலித்தாள்...

பட்டியல் முற்றுபெறும்
முன்னே என்னிதயத்தை
காகிதமாக்கிய வரிகளை
அவள்கையில் திணித்தேன்...

எந்தன் காகித்ததை பார்த்தாள்
எந்தன் கண்களை பார்த்தாள்
காதலை வார்த்தையில் சொல்லாமல்
அவளது பார்வையில் வைத்தாள்...

புணர்தல் இல்லாத காமம்
காமம் இல்லாத காதல்
காதல் இல்லாத அன்பு - இவையாவும்
ஒன்றென என்னையள்ளி அரவணைத்தாள்...

அவள்காட்டிய அன்பிற்கு
பரிசாய் முத்தமளித்தேன்
நான்காட்டிய காதலிற்கு
என்னை கட்டியணைத்தாள்

இதழோடு இதழ்மெல்ல சேர்த்தேன்...
முத்ததிற்குபின் கண்விழித்து பார்த்தேன்
அப்பொழுதுதான் தெரிந்தது எல்லாம்
இன்பமான கனவென்று இதயத்திற்கு..
- sure

No comments:

Post a Comment