Pages

சொல்லாத வார்த்தைகள்...

இவ்வுலகம் நிலவில்லாத வானமாய்
இருண்டு நீண்டு போனதுபோல்...
உன்னுலகமும் கண்களும் கண்டிப்பாய்
இருண்டு தூங்காமல் போயிருக்ககூடும்...

உன்அலைபேசியும் என்குறுஞ்செய்திக்கு காத்திருந்து
உறக்கத்தை இழந்திருக்ககூடும்...
என்அலைபேசியும் என்மனமும் அனுப்பாது
இறந்துபோவதை நீயறிவாயோ?

என்மனதில் என்னவென்று நீயென
உன்னிடம் சொல்லிட எண்ணம்தான்
உன்மனதில் வண்ணத்தை படைத்தால்
என்மனம் தாங்கும் ஒருவேளை
பின்னத்தை கொடுத்தால் தாங்குமோ?

- sure

No comments:

Post a Comment