Pages

வா(ட்)டியது மனம்...

பெரிய மேம்பாலம்
சிறிய துவாரம்
அழகிய மைனாவின்
உயரிய கூடு...

பலநாட்களுக்கு முன்பு

பிறந்திருக்க வேண்டும்
அந்த மைனாகுஞ்சு...

இன்றுதான் முதன்முறையாக

பறந்திட முயற்சியும்
செய்திருக்க வேண்டும்...

சிறகை விரித்து

மெல்ல பறந்தது
நெரிசல் நிறைந்த
சாலைக்கு மேலே...

மேலும் முடியாமலோ

பறக்க தெரியாமலோ
சாலையின்மீதே விழுந்துவிட்டது
கண்ணிமைக்கும் நேரத்தில்...

இரண்டு வாகனம்

மட்டும் ஒவ்வொன்றாய்
அதன்மேலே ஏறாமல்
எப்படியோ சென்றது...

என்னுடைய வாகனம்

பக்கத்தில் கடந்தது
மெதுவாக அதற்குள்
என்னையும் நகர்த்திவிட்டது...

என்மனம் இன்னும்

கடக்காமல் அங்கேயே!!!
அதனுடைய நிலையெண்ணி
நான் செய்வதறியாது...

வாகன நெரிசலிருந்து

தொலைந்து வந்தது
வாகனம் மட்டுமே - என்னிதயமோ
தொலைந்தது அவ்விடமே...

No comments:

Post a Comment