Pages

என் விடியல்...

அன்று...
பொழுது புலர்ந்ததை
சேவல் கூவியது
கேட்டு ரசித்து
துயில் எழுந்தேன்!

பின்....
கடிகாரத்தின் மணியோசை
காதினில் ஒலித்திடவே
விடியலை அறிந்து
தூக்கத்தை கலைத்தேன்!!

இன்றோ....
உந்தன் குறுஞ்செய்திகள்
வந்து எழுப்பினால்
மட்டுமே பொழுது
விடிவதாய் உணருகிறேன்!!!

ஆனால்...
மூடுபனிகாலத்தில் கூட
பொழுதுகள் அதிகாலையில்
விடிந்தது சுகமாய்...
இளவேனிற்காலத்தில் ஏனோ
பொழுதுகள் விடிய
தாமதமாகி போகின்றது...
சிலநாட்கள் விடியாமலே
போவதையாவது நீயறிவாயோ?

- sure

No comments:

Post a Comment