Pages

மழை... நீ... நான்...

மழையே!!!
நான் உன்னை
என்றும் காதலிப்பேன்
நீ என்னை
இன்று காதலிக்காவிடினும்...

நான் உனக்காகவே
ஏங்கி காத்திருக்கேன்
நீ என்னை
காணவராமால் போனாலும்...

கொட்டும் மழைக்காலத்திலே
நீ வருவதில்லை
கோடையில் பின்னெப்படி
நீ வரக்ககூடும்...

நம்பிக்கை மட்டும்தான்
என்னுள் நிலையாய்
நீயுமென்னை கண்டிட
ஒருநாள் வருவாயென...

மழையை மட்டும்
நான் காதலிக்கவில்லை
மங்கை உன்னையும்
தான் காதலிக்கிறேன்...

இதயத்தில் மொட்டுவிட்டு
இதழில் பூக்காமால்
இன்றுவரை என்னுள்
இருக்ககூடும் காதல்....

உள்ளத்தில் விதையாகி
உதட்டில் விருட்சமாய்
உன்னிடம் சொல்லதுடிக்குது
உன்மீதான என்காதல்...

என்றாவது உன்னிடம்
சொல்லி விடக்கூடும்
அன்று உன்அன்பை
முத்தத்தில் சொல்லிவிடு...

எனக்கு மழையே
வேண்டாம் வாழ்நாளில்
எனக்கு கன்னத்தில்
நீகொடுக்கும் ஒன்றேபோதும்...

சிறுதுளி பெருவெள்ளம்
உந்தன் ஓர்முத்தமோ...
எந்தன் நெஞ்சிக்குள்
பெய்திடும் மாமழை...

வான்மழையும் என்னை
நனைக்காமல் பொய்க்ககூடும்
உன்அன்பின் மழையோ - என்னை
நனைக்காமல் போகுமா?
- sure

No comments:

Post a Comment