Pages

Showing posts with label kavithai. Show all posts
Showing posts with label kavithai. Show all posts

நினைவுகள் I TrenDing Now

நினைவுகள்

@sure4an

 நல்ல நினைவுகளாக

இருந்தாலும் சரி கெட்ட

நினைவுகளாக இருந்தாலும் சரி

நினைவுகள் எப்போதும் நம்மலோடுதான் இருக்கும்..

மறக்க இயலாது.

நினைவுகள் வீடியோ 


ஒவ்வொரு காதல் நினைவும் விசேஷமானதுதான்... 

அதிலும் முதல் முறையாக காதலை உணரும்போதும்,

அந்த உணர்வை காதலியிடம்

அல்லது காதலனிடம் சொல்லும்போது ஏற்பட்ட சந்தோஷம், 

பதட்டம், உணர்ச்சிப் தடுமாற்றம் ... 

எல்லாம் மறக்க முடியாத 

பசுமையான நினைவுகள்.


நாட்கள் கடந்து போனாலும் இன்றும் கனமாகதான்

இருக்கிறது மனது.. 

கலைந்து

போனாலும் கனவாக

இருக்கிறது நினைவு..!


தொலைத்த இடமும்

தெரிகின்றது..

தொலைந்த

பொருளும் தெரிகின்றது..

வலியும் உணரப்படுகிறது..

ஆனால் திருப்பி மீட்கத்தான்

முடியவில்லை.

எல்லாமே நினைவுகளாக.


நிஜங்கள் தரும் சந்தோஷத்தை

விட நினைவுகள் தரும்

சந்தோஷம் அதிகம்..

அதனால் தான் நிஜங்கள்

நிலைப்பதில்லை நினைவுகள்

என்றும் அழிவதில்லை.


முகவரி இன்றி முடிந்து போன

உறவுகளிடம் தான் முடங்கி

விடுகிறது நம் நினைவுகள்.


பிடிப்பதற்கு காரணம் இருந்தும்

பிடிக்காமல் போகிறது சிலரை..

வெறுப்பதற்கு காரணம்

இருந்தும் வெறுக்க

முடியவில்லை சிலரை..!


நிஜம் ஒரு நொடி வலி 

நினைவு

ஒவ்வொரு நொடியும் வலி.

மறக்க இயலாமல் வலியுடன்

நினைவுகளை சுமப்பதில்

உள்ளது உண்மையான அன்பு.


உணர்வுகளை நினைவுகளாய்

சேமிக்கும் மனிதர்கள் நாம்..

உணர்வுகளும் குறைய

போவதில்லை.. நினைவுகளும்

முடிய போவதில்லை..


மிக அழகானது சிலரின்

நினைவுகள்.

இது என்னவலுக்காக


உனது நினைவுகளால் நான்

அழிந்து போனாலும்..

உன் நினைவுகள் என்றும்

என்னை விட்டு அழிவதில்லை..!


தனக்காக அழுத பெண்ணையும்

தன்னை அழ வைத்த

பெண்ணையும் ஆண்கள்

ஒருபோதும் மறப்பதில்லை.


என் வாழ்க்கையில் மறக்க

முடியாத நிமிடங்களை உன்னோடு

வாழ்ந்து விட்டேன் இந்த

நினைவுகள் ஒன்றே போதும்

என் உயிர் நீங்கும் வரை..!


உனக்கு என் நினைவு வந்தால்

 உன் இதயத்தைத் தொட்டுப்பார்

நான் துடிப்பேன்..

உன் நினைவுகளோடு.



இறந்து கொண்டிருக்கும்

ஒவ்வொரு நொடியையும்..

என்றும் உயிர்ப்புடன்

வைத்திருப்பது என்னை

நீங்கா உன் நினைவுகள் மட்டுமே..!

அன்பானவளின் அன்பு கவிதை I RJ Malar I TrenDing Now

அன்பானவளின் அன்பு கவிதை 

RJ Malar

அன்பானவர்களுக்காக இறங்கிபோவதும்

தவறில்லை...

நம் அன்பு புறியாதவர்களிடமிருந்து

விலகி போவதும் தவறில்லை...



ஒரு ஆணின் உண்மையான அன்பை

ஒரு பெண் உணர்ந்து விட்டால்... 

அவள்...அவனிடம் ..

எதையும் மறைப்பதும் இல்லை...

மறுப்பதும் இல்லை...


ஒருவரின் அன்பை நீ அலட்சியப்படுத்தும் போது

உனக்கு தெரியாது..

அதே அன்பிற்காக 

ஏங்கும் போதுதான் தெரியும்


யார் இதயத்தில் நாம் இருக்கிறோம்

என்பதைவிட

யார் இதயத்தையும் நாம் காயப்படுத்தாமல்

இருக்கிறோம் என்பதே சிறப்பு


மீண்டும் மீண்டும் நினைக்க தோன்றும்

கடந்த காலத்தின் சில நினைவுகள்தான்

நம் வாழ்வின் வசந்த காலம்


அன்பும் ஒருவித போதைதான்

ஒருமுறை ருசித்துவிட்டால்

அடிமையாகிவிடுகிறது மனது


பிடிதவர்களுடன் சண்டை போடுவது

அவர்களை பிரியவேண்டும்

என்பதற்காக அல்ல - எப்போதும் 

பிரிந்திட கூடாது என்பதற்காக

RJ மலரின் வாழ்க்கை

வாழ்க்கை

என் மனதின் காயங்களுக்கு

யார் காரணம் என கேட்டால்

என்னுடைய எதிர்பார்ப்புகள்

என்பதே உண்மை



சரியான நேரத்தில் அனைத்தும் 

உன்னை வந்து சேரும்

கவலை கொள்ளாதே


தேவையில்லாமல் பேசுவதைவிட

அமைதியாகவே இருந்துவிடலாம்


நம் மனது புரியாத யாருக்கும்

நம் வார்த்தைகளும்

புரியாது


மணம் முடிக்கும் வரை

நேசிப்பது காதலில்லை

மரணம் வரை நேசிப்பதுதான்

உண்மை காதல்


நிறுத்தவும் முடியாமல்

தொடரவும் முடியாமல் 

சில தேடல்கள்


நெருங்கவும் முடியாமல்

விலகவும் முடியாமல்

சில உறவுகள்


சொல்லவும் முடியாமல்

கொல்லவும் முடியாமல்

சில ஆசைகள்


மறுக்கவும் முடியாமல்

வெறுக்கவும் முடியாமல்

சில நினைவுகள்


மாளிகையோ குடிசையோ

எங்கே வாழ்கிறோம்

என்பதல்ல வாழ்க்கை

நாம்

எங்கே சந்தோசமாக வாழ்கிறோம்

என்பதுதான் வாழ்க்கை...

காதல் கவிதை | RJ Malar | Trending

காதல் கவிதை  | Trending

RJ Malar

கற்காலம் முதல்
இந்த கணினி காலம் வரை 
இந்த காதல் சொல்லப்படும் 
விதம் மாறுபட்டதே தவிர 
காதலுக்காக எழுதப்படும் 
கவிதைகள் தொடர்ந்து 
கொண்டுதான் இருக்கிறது.
அப்படி தன் காதலி மேல்
கொண்ட பிரியத்தால்
அந்த பிரியன் 
எழுதிய வரிகள் இதோ....





நின்
அருகாமையில் வேகமாகவும்
தூரத்தில் மெதுவாகவும்
சுழல்வதுமாய் உலகம்;
உன்னால்
பைத்தியமாகிவிட்டது அதுவும்!

*

உன்னில் பாதியாய்
என்னில் மீதியாய்
நம்மில்
முழுதும் காதல்!

*

காதலிப்பதற்கு
நீ இருக்கிறாய்
என்ற காரணமே
போதுமாயிருக்கிறது
நான் தொடர்ந்து சுவாசிப்பதற்கு!

*

வெகுநாட்கள் கழித்து
சந்திக்கும் கணத்தில்
நம் விழி பொங்கும் 
கண்ணீரில்
கப்பல்விடக் காத்திருக்கிறது
காதல்!

*

உன்
கண்மையைக் கொடு;
மைப்போட்டு பார்க்கலாம்
உன்னில் தொலைந்த
என்னிதயத்தை!

அவளின் நினைவுகள் I Ishu I Trending Memories

அவளின் நினைவுகள் 

என் மனம் என்னும் சிப்பிக்குள் 

முத்துபோல் சேமித்து வைத்தேன்

அவளின் நினைவுகளை  

அவளின் நினைவுகளை

For more videos Subscribe My channel

https://bit.ly/3iJ8QRx

என் வாழ்க்கை பிரகாசமாய் 

ஒளிரும் என்று நம்பியிருந்தேன் 

ஆனால் - இன்றோ 

நான் சேர்த்து வைத்த நினைவுகள் எல்லாம் 

என்னை சேதப்படுத்துகிறது 


பேருந்தின்  ஜன்னலோர பயணத்தில் 

கார்மேகம் பொழியும் மழையை கூட ரசிக்க முடியவில்லை 


மேகம் கடந்து மழை துளி நின்ற போதிலும் 

காலம் கடந்த உன் நினைவுகள் 

கண்ணீர் துளியாய் சிந்துகிறது

உன்னோடு பயணம் செய்த 

நாட்களை நினைக்கும் போது 


உன் நினைவுகளின் வலியால் 

நான் துடிக்கிறேன் 

மரிக்கிறேன்...


முயற்சி | Hard work | RJ Suba.J

 முயற்சி | Hard work 

முயற்சி என்பது விதை
போல அதை விதைத்துக்
கொண்டே இரு முளைத்தால்
மரம் இல்லையேல்
நிலத்திற்கு உரம்.


Self Confidence | தன்னம்பிக்கை வரிகள் | RJ Malar Trending

 

Self Confidence | தன்னம்பிக்கை வரிகள்

உனக்குள் இருக்கும் திடகாத்தமான ஆற்றலை வெளிக்கொணர வேண்டி வாழ்க்கை சோதிக்கும் இந்த பரீட்சையில் வெல்வதும் வீழ்வதும் என்றுமே உன் கையிலே…



நம்பிக்கை இருக்கும் மனதில் அச்சம் எழாது..! தன்னம்பிக்கை கொண்டவனின் கைகள் உழைக்க தயங்காது…!


ஒருவர் உன்னை மதிப்பதால் நீ பெரியதாகிவிடப்போவது இல்லை..! உன்னை இகழ்வதாலும் நீ சிரியதாகிவிடமாட்டாய்..! எனவே என்றுமே நீ நீயே என்பதை வாழ்க்கையில் புரிந்து கொள்…!


எதிலுமே சரிசமமாக இருக்க பழகிக்கொள்… அளவுக்கு மீறின கோபமும் நல்லது அல்ல அளவில்லாத பொறுமையும் உன்னை கொல்லும் மெல்ல… எதுவும் ஒரு அளவுக்கே…!


உடம்பு சரி செய்ய உதவும் ஊசி கூட குத்தினால் வலிக்கும் என்கிறபோது உன் வாழ்க்கையை சரி செய்ய நீ கஷ்டப்பட்டு உழைத்தே ஆக வேண்டும்…


நல்லதோ? கெட்டதோ? அனுபவங்களை நீ பெற்றால் மட்டுமே இங்கு வாழ்க்கை என்னும் புத்தகத்தின் பக்கங்கள் பூர்த்தியடைகின்றது.


முடியாது என்று நீ தீர்மானிக்கும் ஒவ்வொரு செயல்களுக்கும் ஏதாவதொரு வகையில் அதை வெல்ல போகும் யுக்தி புதைந்திருக்கும்…


வெற்றி என்பதை அடைய வேண்டுமா? உன் மீதான விமர்சனங்களையும் தேவையில்லாத விவாதங்களையும் பொருட்படுத்தாதே…! விரைவில் உன் இலக்கை நீ அடைவாய்…


இங்கு இருக்கும் வெற்றியாளர்கள் அனைவரின் வாழ்க்கையிலும் எந்தவொரு வகையிலாவது கஷ்டங்களும்,நஷ்டங்கள் மற்றும் பல சிரமங்கள் கண்டிருப்பார்கள். அதை எல்லாம் கடந்த பின்பே வெற்றி என்னும் கோப்பை அவர்களுக்கு கிடைத்திருக்கும்.


இன்றைய உனது செயல்களே நாளை உன்னை உச்சத்திற்கு கொண்டு செல்லும் வெற்றியின் படிக்கட்டுகள்.. உன் திறமையை பொறுத்தே அதன் ஏற்றமும் இறக்கமும் அமையும்…


நடை பழகும் குழந்தை ஒவ்வொரு முறை விழும் போதும் தாங்கி பிடிக்கும் கை தான் நம்பிக்கை கட்டாயம் இதை நாம் வாழும் வாழ்க்கைக்கும் எடுத்துக்கொள்ள வேண்டும்..

ஆங்கில மோகம்

sureSH Kavithai
@sure4an
தன்னைவிட வயதில் மூத்த பெண்களை
தமிழில் அம்மா, அக்கா என விளிக்கும் போது
பெண்களுக்கு இருந்த பாதுகாப்பு
ஆங்கில மோகத்தில் ஆன்டி என அழைக்கத் துவங்கியபின் இல்லை.
@sure4an

என் கிறுக்கல்

sureSH Kavithai
@sure4an

என் கிறுக்கல்களை ஆராய்ந்தால் போதும்
கிறுக்கல்களுக்கு காரணமானவள்
யாரென ஆராய வேண்டாம்...
@sure4an

உன் நினைவுகள்

Tamil Kavithai
@sure4an

உன்னோடு அரட்டை அடிக்கும் இரவெல்லாம்
விடியாமல் போகட்டும்...
நீயில்லா நேரமெல்லாம்
உன் நினைவுகளோடே கடக்கட்டும்...
@sure4an

அரசியல்




சமூகத்தின் சமநிலை தவறும்போதெல்லாம், சகலமும் அவலமாகும் ! மனிதத்தன்மை கேள்விக்குறியாகும ! பொறுமை காத்தால் பறிபோகும் ! போராடுவதே நமது கடைமை ! அரசியலில் நாம் தலையிடவில்லையென்றால் நம் வாழ்வில் தலையிடும் !
@sure4an

யார் இவள்

Tamil cute girl
உதிர்ந்த பூக்களையும் தன் கால்கள் படாமல்தாண்டிச்செல்லும் இளகிய மனம் படைத்தவள்...சிறகுகள் அடித்துபறவைகள் செத்துப்போவதில்லை...இவளிடம் நட்பு கொண்டஎவரும் வீழ்ந்து போவதில்லை..அலைகள் அடித்து கடற்பரப்பு காயப்படுவதில்லை..இவளிடம் அன்பு கொண்டு எவரும் அழிந்து போவதில்லை..

இதுவே நிஜம்...!



இதுவே நிஜம்...!
நீ மட்டும்
என்னருகில்
இருந்தால்
நான் விழிகள்
மூடாமல்
உன்னையே
பார்த்துக்
கொண்டிருப்பேன்.

உன் பார்வை
என்மீது பட்டால்
நான் சுவாசிக்காமலே
உயிர் வாழ்ந்து
கொண்டிருப்பேன்

என்னைப் பெயர்
சொல்லி நீ
அழைத்தால்
குயிலே கவிதை
சொன்னாலும்
நான் அதை
வெறுப்பேன்.

நான் தூங்கும்
போதுகூட
கனவிலே நீ
தோன்ற மறுத்தால்
மறுகணமே இறப்பேன்!

Download PDF File here :- https://userupload.net/j06sso3nwjo6

வா(ட்)டியது மனம்...

பெரிய மேம்பாலம்
சிறிய துவாரம்
அழகிய மைனாவின்
உயரிய கூடு...

பலநாட்களுக்கு முன்பு

பிறந்திருக்க வேண்டும்
அந்த மைனாகுஞ்சு...

இன்றுதான் முதன்முறையாக

பறந்திட முயற்சியும்
செய்திருக்க வேண்டும்...

சிறகை விரித்து

மெல்ல பறந்தது
நெரிசல் நிறைந்த
சாலைக்கு மேலே...

மேலும் முடியாமலோ

பறக்க தெரியாமலோ
சாலையின்மீதே விழுந்துவிட்டது
கண்ணிமைக்கும் நேரத்தில்...

இரண்டு வாகனம்

மட்டும் ஒவ்வொன்றாய்
அதன்மேலே ஏறாமல்
எப்படியோ சென்றது...

என்னுடைய வாகனம்

பக்கத்தில் கடந்தது
மெதுவாக அதற்குள்
என்னையும் நகர்த்திவிட்டது...

என்மனம் இன்னும்

கடக்காமல் அங்கேயே!!!
அதனுடைய நிலையெண்ணி
நான் செய்வதறியாது...

வாகன நெரிசலிருந்து

தொலைந்து வந்தது
வாகனம் மட்டுமே - என்னிதயமோ
தொலைந்தது அவ்விடமே...

மீனும் நீரும்.. நானும் நீனும்

மீன் நீரிடம் சொல்லியது....
நான் அழுவது
tamil Kavithai
தரையில் இருக்கும்
மனிதர்களுக்கு அல்ல
உன்னால் வாழும்
உனக்கும் தெரியாதென்று....

நீர் மீனிடம் சொல்லியது...
நீ அழுவது
எனக்கு புரியும்
கண்டிப்பாக... ஏனெனில்!
நான் வாழ்வது
வேண்டுமானால் உன்னோடு...
நீ வாழ்வதோ
என் இதயத்திலென்று...

அப்படிதான்....
நான் எழுதுவது
மற்றவர்களுக்கு கூட
புரிகிறதே உனக்கு
புரியாமல் போனதேனோ?
என்றிருந்தேன் எனக்குள்...

இன்றுதான் தெரி(ளி)ந்தேன்
உன் இதயத்தில்
வாழும் என்னை
எப்படி நீயறிந்துகொள்ளாமல்
விலகி இருக்ககூடுமென்று...

இது ஒரு குறுஞ்செய்தியின் தாக்கம்...

நிலவின் நேசம்... அங்கே என் வாசம்...

நிலவின் ஒளியாக
என்னைவந்து சேருகிறாய்
உன்னாலே
நானும் என்வரிகளும்
புத்துயிர் பெறுகிறோம்
தென்றலாய் பிறக்கிறோம்.

என்னை நீகாண
நிலாவாய் நித்தம்
வானிலும் என்மனதிலும்
உலா வருகின்றாய்
நான் உன்னை
கண்டு ரசித்திட...

உன்னை நான்காண
தென்றலாய் மாறி
பூக்களிலும் மேகத்திலும்
கலந்து காற்றாய்
வீசி வருகிறேன்
உன்னை தீண்டிட...

நிலவாய் என்னை
நோக்கி நீ
விண்ணிலிருந்து பயணிக்கிறாய்...
தென்றலாய் உன்னை
எதிர்நோக்கி நான்
மண்ணிலிருந்து பயணிக்கிறேன்...

மௌன பேச்சுவார்த்தை..

நித்தம் நித்தம்
இனி வேண்டும்
நமக்குள் சண்டை
உன்னுடன் பேசும்
தருணத்திலும் சரி
உன்னை நினைக்கும்
எல்லா பொழுதிலும்
சமரசத்தை மட்டும்
உனக்கு தொடர்ந்து - என்வாழ்வில்
வழங்கிட நினைத்துக்கொண்டேன்...

என்னோடு நீ...

தமிழ் கவிதை
வான்மதியே!!!
என்னுடைய பகல்நேர
பேருந்து பயணங்களிலும்
என்னருகில் அமர்ந்து
எந்தன்தோள் சாய்ந்து
நீயில்லாத வானத்தை
என்னிடம் கண்ணில்காட்டி
காதில் ரகசியம்கூறி - விண்ணை
ரசிக்க சொல்ன்கிறாய்...
நான் நடந்துசெல்லும்
சாலையின் ஓரங்களிலும்
என்ஒற்றை விரல்பிடித்து
என்னோடு நடைபயில்கின்றாய்
சிலசமயம் உன்னிடையை
என்கைகள் வளைத்து
இதமாய் அரவணைத்து - நடக்கும்படி என்னை நீயே 
மாற்றுகின்றாய்....
நான் உண்பதற்கு
செல்லும் உணவங்களுக்கு
எனக்கு முன்னால்
போட்டியிட்டு செல்ன்கிறாய்...
உனக்கு பிடித்ததை
எனக்கும்..
எனக்கு பிடித்ததை
உனக்கும்...
கொண்டுவர சொல்லி
அன்போடு உணவையும்
ஊட்டிவிட்டும் ஊட்டிவிட - வார்த்தையில்
சொல்லியும் மகிழ்கின்றாய்...
வான் தொலைவில்
நீயிருக்கும் போதே
இத்தனை மாற்றங்களை
என்னுள் புகுத்துகின்றாய்...
என்னை காண்பதற்கு
ஒருவேளை பூமிக்கு
இறங்கி வந்தால் - என்னவாகி
போவேன் உன்னால்?

நான்... கண்களா? இமையா?

தோழியே!
உலகத்தை நீ பார்க்க
உண்மையான நட்பாய்
உனக்கு ஆயிரம்
கண்கள் இருக்கலாம்...

அதில் நானுனக்கு
வலதுகண்ணோ? இடதுகண்ணோ?
தெரியாது? ஒருவேளை
எத்தனை கண்கள்
இருந்தாலும் அத்தனை
கண்களை காத்திடும் இமையாகவே எந்நாளும் 
இருக்க ஆசைப்படுகிறேன்...

அன்புத் தோழி

               நீ பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான்                

              உன்னையே முறைத்துப் பார்த்தேன்                            

                 நீ கேட்க வேண்டும் என்பதற்காகத்தான்                 

                    உன் பெயரை உரைக்கக் கூப்பிட்டேன்                   

       நீ என்னுடன் பேச வேண்டும் என்பதற்காகத்தான்       

                                    உனக்கு பிடித்தபடி நடந்தேன்                      

                 நீ படிக்க வேண்டும் என்பதற்காகத்தான்                 

                         இந்த கவிதையையே படைத்தேன்                        

                         படிப்பாயா என் அன்புத் தோழி!!!!!