Pages

சந்தோச கண்ணீரே



"சந்தோச கண்ணீரே"!... "
பொக்கிசங்கள் உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும்!.... 
உன்னை தேடித் தேடி தோய்ந்து விட்ட‌ என் நினைவுகள்,.. 
இன்று, சிதறிப்போன கண்ணாடி சில்லுகளாய்!... 
சாலையோரம் உன் வருகைக்காக‌ முகம் புதைத்து காத்திருக்கின்றன!... 
என்னை விட்டு நீங்கி போனது நீ மட்டுமல்ல‌,.. 
உன் நினைவுகளும் தான் என்பது, 
எனக்கு மட்டுமே தேரிந்த உண்மை என் நினைவுகளுக்கல்ல!.... 
பொக்கிசங்கள் உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும்"!.... 
உணர்வுகளுடன், "நான்"