Pages

Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

யார் இவள்

Tamil cute girl
உதிர்ந்த பூக்களையும் தன் கால்கள் படாமல்தாண்டிச்செல்லும் இளகிய மனம் படைத்தவள்...சிறகுகள் அடித்துபறவைகள் செத்துப்போவதில்லை...இவளிடம் நட்பு கொண்டஎவரும் வீழ்ந்து போவதில்லை..அலைகள் அடித்து கடற்பரப்பு காயப்படுவதில்லை..இவளிடம் அன்பு கொண்டு எவரும் அழிந்து போவதில்லை..

வா(ட்)டியது மனம்...

பெரிய மேம்பாலம்
சிறிய துவாரம்
அழகிய மைனாவின்
உயரிய கூடு...

பலநாட்களுக்கு முன்பு

பிறந்திருக்க வேண்டும்
அந்த மைனாகுஞ்சு...

இன்றுதான் முதன்முறையாக

பறந்திட முயற்சியும்
செய்திருக்க வேண்டும்...

சிறகை விரித்து

மெல்ல பறந்தது
நெரிசல் நிறைந்த
சாலைக்கு மேலே...

மேலும் முடியாமலோ

பறக்க தெரியாமலோ
சாலையின்மீதே விழுந்துவிட்டது
கண்ணிமைக்கும் நேரத்தில்...

இரண்டு வாகனம்

மட்டும் ஒவ்வொன்றாய்
அதன்மேலே ஏறாமல்
எப்படியோ சென்றது...

என்னுடைய வாகனம்

பக்கத்தில் கடந்தது
மெதுவாக அதற்குள்
என்னையும் நகர்த்திவிட்டது...

என்மனம் இன்னும்

கடக்காமல் அங்கேயே!!!
அதனுடைய நிலையெண்ணி
நான் செய்வதறியாது...

வாகன நெரிசலிருந்து

தொலைந்து வந்தது
வாகனம் மட்டுமே - என்னிதயமோ
தொலைந்தது அவ்விடமே...

மீனும் நீரும்.. நானும் நீனும்

மீன் நீரிடம் சொல்லியது....
நான் அழுவது
tamil Kavithai
தரையில் இருக்கும்
மனிதர்களுக்கு அல்ல
உன்னால் வாழும்
உனக்கும் தெரியாதென்று....

நீர் மீனிடம் சொல்லியது...
நீ அழுவது
எனக்கு புரியும்
கண்டிப்பாக... ஏனெனில்!
நான் வாழ்வது
வேண்டுமானால் உன்னோடு...
நீ வாழ்வதோ
என் இதயத்திலென்று...

அப்படிதான்....
நான் எழுதுவது
மற்றவர்களுக்கு கூட
புரிகிறதே உனக்கு
புரியாமல் போனதேனோ?
என்றிருந்தேன் எனக்குள்...

இன்றுதான் தெரி(ளி)ந்தேன்
உன் இதயத்தில்
வாழும் என்னை
எப்படி நீயறிந்துகொள்ளாமல்
விலகி இருக்ககூடுமென்று...

இது ஒரு குறுஞ்செய்தியின் தாக்கம்...

நிலவின் நேசம்... அங்கே என் வாசம்...

நிலவின் ஒளியாக
என்னைவந்து சேருகிறாய்
உன்னாலே
நானும் என்வரிகளும்
புத்துயிர் பெறுகிறோம்
தென்றலாய் பிறக்கிறோம்.

என்னை நீகாண
நிலாவாய் நித்தம்
வானிலும் என்மனதிலும்
உலா வருகின்றாய்
நான் உன்னை
கண்டு ரசித்திட...

உன்னை நான்காண
தென்றலாய் மாறி
பூக்களிலும் மேகத்திலும்
கலந்து காற்றாய்
வீசி வருகிறேன்
உன்னை தீண்டிட...

நிலவாய் என்னை
நோக்கி நீ
விண்ணிலிருந்து பயணிக்கிறாய்...
தென்றலாய் உன்னை
எதிர்நோக்கி நான்
மண்ணிலிருந்து பயணிக்கிறேன்...

மௌன பேச்சுவார்த்தை..

நித்தம் நித்தம்
இனி வேண்டும்
நமக்குள் சண்டை
உன்னுடன் பேசும்
தருணத்திலும் சரி
உன்னை நினைக்கும்
எல்லா பொழுதிலும்
சமரசத்தை மட்டும்
உனக்கு தொடர்ந்து - என்வாழ்வில்
வழங்கிட நினைத்துக்கொண்டேன்...

என்னோடு நீ...

தமிழ் கவிதை
வான்மதியே!!!
என்னுடைய பகல்நேர
பேருந்து பயணங்களிலும்
என்னருகில் அமர்ந்து
எந்தன்தோள் சாய்ந்து
நீயில்லாத வானத்தை
என்னிடம் கண்ணில்காட்டி
காதில் ரகசியம்கூறி - விண்ணை
ரசிக்க சொல்ன்கிறாய்...
நான் நடந்துசெல்லும்
சாலையின் ஓரங்களிலும்
என்ஒற்றை விரல்பிடித்து
என்னோடு நடைபயில்கின்றாய்
சிலசமயம் உன்னிடையை
என்கைகள் வளைத்து
இதமாய் அரவணைத்து - நடக்கும்படி என்னை நீயே 
மாற்றுகின்றாய்....
நான் உண்பதற்கு
செல்லும் உணவங்களுக்கு
எனக்கு முன்னால்
போட்டியிட்டு செல்ன்கிறாய்...
உனக்கு பிடித்ததை
எனக்கும்..
எனக்கு பிடித்ததை
உனக்கும்...
கொண்டுவர சொல்லி
அன்போடு உணவையும்
ஊட்டிவிட்டும் ஊட்டிவிட - வார்த்தையில்
சொல்லியும் மகிழ்கின்றாய்...
வான் தொலைவில்
நீயிருக்கும் போதே
இத்தனை மாற்றங்களை
என்னுள் புகுத்துகின்றாய்...
என்னை காண்பதற்கு
ஒருவேளை பூமிக்கு
இறங்கி வந்தால் - என்னவாகி
போவேன் உன்னால்?

உன் அன்பின் நினைவில்...!!!!!

நீ விரும்பாததை நான்
வெறுத்த போதும்...!!!

நான் விரும்புவதை நீ
நேசித்த போதும்...
உருவானது ஒரு இனிய உறவு...

என் தவறை நீ சுட்டி காட்டிய போதும்..
உன் கோபத்தின் பின் விளைவை
நான் விளக்கி சொன்ன போதும்....

முழு மனதோடு நாம் ஏற்று கொண்ட
பரஸ்பரத்திலேயே நீடிக்கிறது நம் உறவு...

நான் உன்னை மறக்க மாட்டேன்.....நீயும்
என்னை மறக்க கூடாது...என்று நீ சொன்ன
அன்பு கட்டளைக்கு அடி பணிந்து.....
ஆயுள் எல்லாம் காத்திருக்கிறேன்.....

நீயும் என்னை மறக்காமல்......
இருப்பாயா என்ற கேள்வி குறியோடும்???
உன் அன்பான நினைவோடும்...!!!!!!!!!

கிராமத்துக் காதலி

பணிக்காக பட்டணம் பயணப்பட்டவன்...
பண்டிகைக்காக மட்டும்
சொந்தக் கிராமம் நோக்கி பயணிக்கிறேன்...

பேருந்தில் ஏறி ஜன்னலோர
இருக்கைத் தேடி அமர்ந்து...
ஜன்னலின் திரைச்சீலை விலக்கினேன்..
தானாகவே விலகிக் கொண்டது
கூடவே எனது மனத்திரையும்.....

 ஏதோ சத்தம் கேட்டு
வெளியில் எட்டிப் பார்த்தேன்...
ஒரு குட்டி தேவதை
மிளிரும் புன்னகையோடும்,
மழலை பேச்சோடும்,
தன் தாயின் விரல் பிடித்து
நடக்கும் காட்சியை கண்டேன்....

அது பார்த்துக்கொண்டே இருக்கத் தூண்டும்
காட்சிதான் எனினும், வேகமாக முகம் திருப்பி,
இருக்கையில் சாய்ந்தேன்..!!!!!

பேருந்து முன்னோக்கியும்,
நினைவுகள் பின்னோக்கியும்,
ஒருசேரப் பயணப்பட்டது....!!!!

அந்த பிஞ்சு மழலையின் பேச்சு,
உன்னுடனான ஆரம்பக்கல்வி
காலங்களை நினைவு படுத்த
அதில் மூழ்கியபடி கண் அயர்ந்தேன்..

வெளியில் மீண்டும் சத்தம்
என்னவென்று கதவு திறந்தேன்...!!!!
மேகத்தோடு தென்றலும்,
என் இதயத்தோடு உன் நினைவுகளும்,
ஒரு சேர மோதி இரு வேறு துளியாய்
வெளிப்பட்டது வெளியில் மழையாகவும்,
விழியில் கண்ணீராகவும்....

ஒன்று உனக்கு பிடித்த மழை,
மற்றொன்று எனக்கு பிடித்த உன் நினைவுகள்..
எனவே இரண்டையும் ரசித்தபடி,
பயணம் தொடர்ந்தது.....!!!

உயர்க்கல்வியில் உடைந்த நம்நட்பு
கல்லூரியிலும் கை கூடாமல்
போனதை நினைத்து கொண்டும்,

சில வருடம் பார்க்காமலும்,
பல வருடம் பேசாமலும்,
கடந்த போன நாட்களின்
வறட்சி கண்களில் மீண்டும் நீர் வார்க்க,
சுகமான பயணமும் முடிவுக்கு வர...,

கீழிறங்கி பார்வை வீசினேன்....
கண் அளக்கும் தூரத்தில் எப்போதும்போல.....
உன் சாயலில் ஒரு பெண் முகம் தெரிய
நடையை தொடர்கிறேன்....
அது நீயாக இருந்து விட மாட்டாயோ?
என்ற கேள்விக்குறியோடும்? எதிர்பார்ப்போடும்?
உன் மீதான அதே பழையக் காதலுடன்....!!!!!!

சந்தோச கண்ணீரே



"சந்தோச கண்ணீரே"!... "
பொக்கிசங்கள் உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும்!.... 
உன்னை தேடித் தேடி தோய்ந்து விட்ட‌ என் நினைவுகள்,.. 
இன்று, சிதறிப்போன கண்ணாடி சில்லுகளாய்!... 
சாலையோரம் உன் வருகைக்காக‌ முகம் புதைத்து காத்திருக்கின்றன!... 
என்னை விட்டு நீங்கி போனது நீ மட்டுமல்ல‌,.. 
உன் நினைவுகளும் தான் என்பது, 
எனக்கு மட்டுமே தேரிந்த உண்மை என் நினைவுகளுக்கல்ல!.... 
பொக்கிசங்கள் உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும்"!.... 
உணர்வுகளுடன், "நான்"

நெஞ்சே வழி விடு



பாதையோரம் உந்தன்
காதல் போக.....
அந்தப் பாதையோரம்
எந்தன் கால்கள் போகும்.
நெஞ்சே... வழி விடு.
நான்தான்... விடை கொடு.!

மெளனம் என்னைக் கொல்லுதே...
என்மனமே உன்னை நாடுதே.
இரவில் காணும் கனவிலே...
அடிமையாகிறேன் உன் பேச்சிலே.!

கண்கள் திறந்தால் உன் நினைவுகள்...
நிழலாய்த் தோன்றி மறையுதே.
தினமும் காலை தவிக்கிறேன்...
வரமாய் உன்னை அடையவே.!

கண்கள் பார்க்குது கண்ணாடி _ அதில்
தெரியுது உன்விம்பம் முன்னாடி.
புன்னகை தவழும் பூவே _ உன்னைப்
புரிஞ்சுக்க முடியல என் மனசே.!

என் இதயத்தைத் தேடி வந்தவளே...
ஏன் இன்னும் தயக்கம் புரியவில்லே.
தவம் இருந்தேன் உன்னையடைய...
தரிசனமாய் வந்தாய் என்னருகே.!

நம்மிடம் இருப்பதெல்லாம்

நான் உன்னிடம்
ஓன்றே ஒன்றுதான்
கேட்டேன் ..........
அது உன் நட்பு
மட்டும்தான் ............
நீ உன் நட்பை தர யோசித்தால் .........
நான் என் உயிரை விட யோசிகமடேன் .....
ஆனால் என் உயிரை விட்டு
உன்னை யோசிக்க வைப்பேன் ..........
இவன் நட்பு கிடைக்கவில்லை என்று............. ..

-----------------------x-sure-x------------------------

நீயும்
என்னருகில் இல்லை..
நானும்
உன்னருகில் இல்லை...

நீயும்
என்னை பார்த்ததில்லை..
நானும்
உன்னை பார்த்ததில்லை...

நீயும்
என்னிடம் எதையும் பகிர்ந்ததில்லை..
நானும்
உன்னிடம் எதையும் பகிர்ந்ததில்லை...

நீயும்
என் சந்தோஷங்களை கண்டதில்லை..
நானும்
உன் சந்தோஷங்களை கொண்டாடியதில்லை...

நீயும்
என் வருத்தங்களில்
என் கைகளை பிடித்து கொண்டதில்லை..
நானும்
உன் வருத்தங்களில்
உன் கைகளை பிடித்து கொண்டதில்லை...

நீயும்
எந்த மழை நாளிலும்
என்னோடு நடந்ததில்லை..
நானும்
எந்த மழை நாளிலும்
உன்னோடு நடந்ததில்லை...

நம்மிடம்
இருப்பதெல்லாம்
நாம்
என்று நம்மை சொல்லவைக்கும்
ஒரு சின்ன நட்பு மட்டுமே....

நட்பைவிட வேறேது இன்பம்


நீ எனக்கு தோழியாக கிடைக்க
நான் ஏது தவம் செய்தேனோ?
கலகலவென நகைக்கும் வயதில்
சலனமில்லாமல் இவ்வளவு சோகமா?

உனக்குள் இருக்கும் சோகத்தை
எனக்குள் இன்றே புதைத்துவிட்டு
கள்ளமின்றிச் சிரித்திட
உல்லாச வானில் பறந்திடு

உன் இலட்சியங்களை நிறைவேற்ற
என்றும் உனக்கு துணையாவேன்
இன்றே விரைந்து புறப்படு
நன்றே நடக்கும் உன்வாழ்வில்

பழையனவற்றை மறந்திடு
புதியதை தேடி விரைந்திடு
சோகத்தை தூக்கி எறிந்திடு
தோழி என் தோளில் தலை சாய்த்திடு

ஆயிரம் உறவுகள் தோன்றியும்
அன்பில்லையே என சலிக்காதே
நட்பைவிட வேறேது இன்பம்
நானிருப்பேன் கலங்காதே ....

பேசத் துடிக்கும் வார்த்தைகள்

பெண்ணே...!
உன்னைப் பார்க்கும் போது
பேசத் துடிக்கும் வார்த்தைகள்
மெளனமாகி விடுகின்றது.

பெண்ணே....!
உன்னை விட்டு விலகும் போது
உணர்ச்சியற்ற கால்களாய்ப்
போகின்றது.

பெண்ணே....
உன்னை நினைக்கும் போது
கவிமழையாய்ப் பொழிகிறது
என் இதயத்தில்.

பெண்ணே....
உன்னை கனவில் அணைக்கும் போது கூட‌
பூக்களாய் நினைத்து பூஜை அறையில்
பூட்டி வைக்க விரும்புகின்றேன்.

பெண்ணே....
உனைப் பார்த்து வரைந்த போது
என் உயிர் கொடுத்து
உயிர் ஓவியமாய் மாற்றிவிட்டேன்.

பெண்ணே....
உன்னை நினைத்து மரணித்த போது
என்னை ஆழமாய் விரும்பினாய்.
நான் ஆவியாய் அலைகின்றேன்.

பெண்ணே....
மறு ஜென்மம் மலரும் போது
நான் நீயாகவும்... நீ... நானாகவும்
அப்போ புரியும் என் காதல் வலி.

இதுவே நிஜம்




நீ மட்டும்
என்னருகில்
இருந்தால்
நான் விழிகள்
மூடாமல்
உன்னையே
பார்த்துக்
கொண்டிருப்பேன்.


உன் பார்வை
என்மீது பட்டால்
நான் சுவாசிக்காமலே
உயிர் வாழ்ந்து
கொண்டிருப்பேன்


என்னைப் பெயர்
சொல்லி நீ
அழைத்தால்
குயிலே கவிதை
சொன்னாலும்
நான் அதை
வெறுப்பேன்.

நான் தூங்கும்
போதுகூட
கனவிலே நீ
தோன்ற மறுத்தால்
மறுகணமே இறப்பேன்!