Pages

இன்று போல் என்றும் இருக்குமா?

பிறந்திருக்கும் புத்தாண்டில் மனதுக்கு
பிடித்தவர்களோடு பேச நினைத்தாலே
உள்ளம்தானாக விண்ணில் பறக்கும்...

இருவரும் பேசும் சமயத்திலோ
விண்ணும் இடிந்து விழுந்தாலும்
நெஞ்சம் அறியாமல் போகும்...

தொலைவில் இருந்தாலும் பேசும்
மொழிதனில் அகம் மகிழ்ந்து
அமிர்தமும் சுவையற்று போகும்...

பக்கத்தில் அமர்ந்து பாயசமுண்டு
புத்தாண்டை கழிப்பதை விடவும்
இதயத்திற்குள் சந்தோஷம் பொங்கும்...

உதட்டில் வார்த்தைகளாய் அல்லாது
உதிர்த்து விட்ட மெளனமல்லாத
மொ(மு)த்தபூவும் தேனாய் இனிக்கும்...

செவியில் உணர்ந்த உண(ர்)வு
உதிரத்தில் கலந்து உடல்முழுதும் - என்றென்றும்
பரவசம் அடைய செய்கிறது....

- sure

No comments:

Post a Comment