Pages

நினைவுகள் I TrenDing Now

நினைவுகள்

@sure4an

 நல்ல நினைவுகளாக

இருந்தாலும் சரி கெட்ட

நினைவுகளாக இருந்தாலும் சரி

நினைவுகள் எப்போதும் நம்மலோடுதான் இருக்கும்..

மறக்க இயலாது.

நினைவுகள் வீடியோ 


ஒவ்வொரு காதல் நினைவும் விசேஷமானதுதான்... 

அதிலும் முதல் முறையாக காதலை உணரும்போதும்,

அந்த உணர்வை காதலியிடம்

அல்லது காதலனிடம் சொல்லும்போது ஏற்பட்ட சந்தோஷம், 

பதட்டம், உணர்ச்சிப் தடுமாற்றம் ... 

எல்லாம் மறக்க முடியாத 

பசுமையான நினைவுகள்.


நாட்கள் கடந்து போனாலும் இன்றும் கனமாகதான்

இருக்கிறது மனது.. 

கலைந்து

போனாலும் கனவாக

இருக்கிறது நினைவு..!


தொலைத்த இடமும்

தெரிகின்றது..

தொலைந்த

பொருளும் தெரிகின்றது..

வலியும் உணரப்படுகிறது..

ஆனால் திருப்பி மீட்கத்தான்

முடியவில்லை.

எல்லாமே நினைவுகளாக.


நிஜங்கள் தரும் சந்தோஷத்தை

விட நினைவுகள் தரும்

சந்தோஷம் அதிகம்..

அதனால் தான் நிஜங்கள்

நிலைப்பதில்லை நினைவுகள்

என்றும் அழிவதில்லை.


முகவரி இன்றி முடிந்து போன

உறவுகளிடம் தான் முடங்கி

விடுகிறது நம் நினைவுகள்.


பிடிப்பதற்கு காரணம் இருந்தும்

பிடிக்காமல் போகிறது சிலரை..

வெறுப்பதற்கு காரணம்

இருந்தும் வெறுக்க

முடியவில்லை சிலரை..!


நிஜம் ஒரு நொடி வலி 

நினைவு

ஒவ்வொரு நொடியும் வலி.

மறக்க இயலாமல் வலியுடன்

நினைவுகளை சுமப்பதில்

உள்ளது உண்மையான அன்பு.


உணர்வுகளை நினைவுகளாய்

சேமிக்கும் மனிதர்கள் நாம்..

உணர்வுகளும் குறைய

போவதில்லை.. நினைவுகளும்

முடிய போவதில்லை..


மிக அழகானது சிலரின்

நினைவுகள்.

இது என்னவலுக்காக


உனது நினைவுகளால் நான்

அழிந்து போனாலும்..

உன் நினைவுகள் என்றும்

என்னை விட்டு அழிவதில்லை..!


தனக்காக அழுத பெண்ணையும்

தன்னை அழ வைத்த

பெண்ணையும் ஆண்கள்

ஒருபோதும் மறப்பதில்லை.


என் வாழ்க்கையில் மறக்க

முடியாத நிமிடங்களை உன்னோடு

வாழ்ந்து விட்டேன் இந்த

நினைவுகள் ஒன்றே போதும்

என் உயிர் நீங்கும் வரை..!


உனக்கு என் நினைவு வந்தால்

 உன் இதயத்தைத் தொட்டுப்பார்

நான் துடிப்பேன்..

உன் நினைவுகளோடு.



இறந்து கொண்டிருக்கும்

ஒவ்வொரு நொடியையும்..

என்றும் உயிர்ப்புடன்

வைத்திருப்பது என்னை

நீங்கா உன் நினைவுகள் மட்டுமே..!

அன்பானவளின் அன்பு கவிதை I RJ Malar I TrenDing Now

அன்பானவளின் அன்பு கவிதை 

RJ Malar

அன்பானவர்களுக்காக இறங்கிபோவதும்

தவறில்லை...

நம் அன்பு புறியாதவர்களிடமிருந்து

விலகி போவதும் தவறில்லை...



ஒரு ஆணின் உண்மையான அன்பை

ஒரு பெண் உணர்ந்து விட்டால்... 

அவள்...அவனிடம் ..

எதையும் மறைப்பதும் இல்லை...

மறுப்பதும் இல்லை...


ஒருவரின் அன்பை நீ அலட்சியப்படுத்தும் போது

உனக்கு தெரியாது..

அதே அன்பிற்காக 

ஏங்கும் போதுதான் தெரியும்


யார் இதயத்தில் நாம் இருக்கிறோம்

என்பதைவிட

யார் இதயத்தையும் நாம் காயப்படுத்தாமல்

இருக்கிறோம் என்பதே சிறப்பு


மீண்டும் மீண்டும் நினைக்க தோன்றும்

கடந்த காலத்தின் சில நினைவுகள்தான்

நம் வாழ்வின் வசந்த காலம்


அன்பும் ஒருவித போதைதான்

ஒருமுறை ருசித்துவிட்டால்

அடிமையாகிவிடுகிறது மனது


பிடிதவர்களுடன் சண்டை போடுவது

அவர்களை பிரியவேண்டும்

என்பதற்காக அல்ல - எப்போதும் 

பிரிந்திட கூடாது என்பதற்காக

RJ மலரின் வாழ்க்கை

வாழ்க்கை

என் மனதின் காயங்களுக்கு

யார் காரணம் என கேட்டால்

என்னுடைய எதிர்பார்ப்புகள்

என்பதே உண்மை



சரியான நேரத்தில் அனைத்தும் 

உன்னை வந்து சேரும்

கவலை கொள்ளாதே


தேவையில்லாமல் பேசுவதைவிட

அமைதியாகவே இருந்துவிடலாம்


நம் மனது புரியாத யாருக்கும்

நம் வார்த்தைகளும்

புரியாது


மணம் முடிக்கும் வரை

நேசிப்பது காதலில்லை

மரணம் வரை நேசிப்பதுதான்

உண்மை காதல்


நிறுத்தவும் முடியாமல்

தொடரவும் முடியாமல் 

சில தேடல்கள்


நெருங்கவும் முடியாமல்

விலகவும் முடியாமல்

சில உறவுகள்


சொல்லவும் முடியாமல்

கொல்லவும் முடியாமல்

சில ஆசைகள்


மறுக்கவும் முடியாமல்

வெறுக்கவும் முடியாமல்

சில நினைவுகள்


மாளிகையோ குடிசையோ

எங்கே வாழ்கிறோம்

என்பதல்ல வாழ்க்கை

நாம்

எங்கே சந்தோசமாக வாழ்கிறோம்

என்பதுதான் வாழ்க்கை...

காதல் கவிதை | RJ Malar | Trending

காதல் கவிதை  | Trending

RJ Malar

கற்காலம் முதல்
இந்த கணினி காலம் வரை 
இந்த காதல் சொல்லப்படும் 
விதம் மாறுபட்டதே தவிர 
காதலுக்காக எழுதப்படும் 
கவிதைகள் தொடர்ந்து 
கொண்டுதான் இருக்கிறது.
அப்படி தன் காதலி மேல்
கொண்ட பிரியத்தால்
அந்த பிரியன் 
எழுதிய வரிகள் இதோ....





நின்
அருகாமையில் வேகமாகவும்
தூரத்தில் மெதுவாகவும்
சுழல்வதுமாய் உலகம்;
உன்னால்
பைத்தியமாகிவிட்டது அதுவும்!

*

உன்னில் பாதியாய்
என்னில் மீதியாய்
நம்மில்
முழுதும் காதல்!

*

காதலிப்பதற்கு
நீ இருக்கிறாய்
என்ற காரணமே
போதுமாயிருக்கிறது
நான் தொடர்ந்து சுவாசிப்பதற்கு!

*

வெகுநாட்கள் கழித்து
சந்திக்கும் கணத்தில்
நம் விழி பொங்கும் 
கண்ணீரில்
கப்பல்விடக் காத்திருக்கிறது
காதல்!

*

உன்
கண்மையைக் கொடு;
மைப்போட்டு பார்க்கலாம்
உன்னில் தொலைந்த
என்னிதயத்தை!

அவளின் நினைவுகள் I Ishu I Trending Memories

அவளின் நினைவுகள் 

என் மனம் என்னும் சிப்பிக்குள் 

முத்துபோல் சேமித்து வைத்தேன்

அவளின் நினைவுகளை  

அவளின் நினைவுகளை

For more videos Subscribe My channel

https://bit.ly/3iJ8QRx

என் வாழ்க்கை பிரகாசமாய் 

ஒளிரும் என்று நம்பியிருந்தேன் 

ஆனால் - இன்றோ 

நான் சேர்த்து வைத்த நினைவுகள் எல்லாம் 

என்னை சேதப்படுத்துகிறது 


பேருந்தின்  ஜன்னலோர பயணத்தில் 

கார்மேகம் பொழியும் மழையை கூட ரசிக்க முடியவில்லை 


மேகம் கடந்து மழை துளி நின்ற போதிலும் 

காலம் கடந்த உன் நினைவுகள் 

கண்ணீர் துளியாய் சிந்துகிறது

உன்னோடு பயணம் செய்த 

நாட்களை நினைக்கும் போது 


உன் நினைவுகளின் வலியால் 

நான் துடிக்கிறேன் 

மரிக்கிறேன்...


முயற்சி | Hard work | RJ Suba.J

 முயற்சி | Hard work 

முயற்சி என்பது விதை
போல அதை விதைத்துக்
கொண்டே இரு முளைத்தால்
மரம் இல்லையேல்
நிலத்திற்கு உரம்.


Self Confidence | தன்னம்பிக்கை வரிகள் | RJ Malar Trending

 

Self Confidence | தன்னம்பிக்கை வரிகள்

உனக்குள் இருக்கும் திடகாத்தமான ஆற்றலை வெளிக்கொணர வேண்டி வாழ்க்கை சோதிக்கும் இந்த பரீட்சையில் வெல்வதும் வீழ்வதும் என்றுமே உன் கையிலே…



நம்பிக்கை இருக்கும் மனதில் அச்சம் எழாது..! தன்னம்பிக்கை கொண்டவனின் கைகள் உழைக்க தயங்காது…!


ஒருவர் உன்னை மதிப்பதால் நீ பெரியதாகிவிடப்போவது இல்லை..! உன்னை இகழ்வதாலும் நீ சிரியதாகிவிடமாட்டாய்..! எனவே என்றுமே நீ நீயே என்பதை வாழ்க்கையில் புரிந்து கொள்…!


எதிலுமே சரிசமமாக இருக்க பழகிக்கொள்… அளவுக்கு மீறின கோபமும் நல்லது அல்ல அளவில்லாத பொறுமையும் உன்னை கொல்லும் மெல்ல… எதுவும் ஒரு அளவுக்கே…!


உடம்பு சரி செய்ய உதவும் ஊசி கூட குத்தினால் வலிக்கும் என்கிறபோது உன் வாழ்க்கையை சரி செய்ய நீ கஷ்டப்பட்டு உழைத்தே ஆக வேண்டும்…


நல்லதோ? கெட்டதோ? அனுபவங்களை நீ பெற்றால் மட்டுமே இங்கு வாழ்க்கை என்னும் புத்தகத்தின் பக்கங்கள் பூர்த்தியடைகின்றது.


முடியாது என்று நீ தீர்மானிக்கும் ஒவ்வொரு செயல்களுக்கும் ஏதாவதொரு வகையில் அதை வெல்ல போகும் யுக்தி புதைந்திருக்கும்…


வெற்றி என்பதை அடைய வேண்டுமா? உன் மீதான விமர்சனங்களையும் தேவையில்லாத விவாதங்களையும் பொருட்படுத்தாதே…! விரைவில் உன் இலக்கை நீ அடைவாய்…


இங்கு இருக்கும் வெற்றியாளர்கள் அனைவரின் வாழ்க்கையிலும் எந்தவொரு வகையிலாவது கஷ்டங்களும்,நஷ்டங்கள் மற்றும் பல சிரமங்கள் கண்டிருப்பார்கள். அதை எல்லாம் கடந்த பின்பே வெற்றி என்னும் கோப்பை அவர்களுக்கு கிடைத்திருக்கும்.


இன்றைய உனது செயல்களே நாளை உன்னை உச்சத்திற்கு கொண்டு செல்லும் வெற்றியின் படிக்கட்டுகள்.. உன் திறமையை பொறுத்தே அதன் ஏற்றமும் இறக்கமும் அமையும்…


நடை பழகும் குழந்தை ஒவ்வொரு முறை விழும் போதும் தாங்கி பிடிக்கும் கை தான் நம்பிக்கை கட்டாயம் இதை நாம் வாழும் வாழ்க்கைக்கும் எடுத்துக்கொள்ள வேண்டும்..