Pages

நண்பர்

ஒரேகருவறையில் பிறக்கவில்லை
ஈகரையில் இணைந்தோம்
அக்கறையை பகிர்ந்தோம்
எக்கரையிலோ இருந்தபோதும்...

இலங்கையில் பிறந்த
இராமன் நீ
இந்தியாவில் பிறந்த
விபிஷ்ணன் நான்

மதம் வேறாக இருக்கலாம்...
மனம் ஒன்றுதான் நமக்குள்...
எம்மதமும் சம்மதம்
எண்ணம் நமக்குள்...

நித்தம் பேசாமல்
போனாலும் உன்னோடு
பாசம் இல்லாமல்
போகாது என்னோடு...

கடல்கடந்து வாழ்ந்தாலும்
என்வாசமும் சுவாசமும்
நம்மை அறியாமலே
கலந்திருக்கும் காற்றினில்...

வாழ்வதற்கு பணம் தேவை...
வாழ்வில் குணம் தேவை...
வாழ்க்கைக்கு ஓர்துணை தேவை...
வார்த்தையில் பலமுறை கூறியவனே...

வாழ்வில் உனக்காவது
மணம் முடித்துகொள்ள
நான் ஆசைபடுகிறேன் - அதற்கு
உன்வரவினை எண்ணி...

- sure

No comments:

Post a Comment