Pages

?????

மஞ்சத்தின் மீது
பஞ்சணையாய் நினைத்து
நெஞ்சத்தில் உறங்கும்போது
எந்தன் வலப்பகத்தில் - நித்தம்
தலைசாய்த்து துகில்கொள்...

ஏனெனில்!
உயிராக என்னிதயத்தில்
உள்ளேவாழும் நீயாகிய
உனக்கு மெல்ல
உந்தன் சிரமோ?
உந்தன் கரமோ? -
உரசினாலும்கூட வலிக்ககூடும்...


இல்லையேல்...
இடப்பகத்தில் ஒலிக்கும்
இதயதுடிப்பின் ஓசையாகிய
உன்பெயரே மெல்ல
உன்தூக்கத்தை கெடுக்ககூடும்...

- sure

No comments:

Post a Comment