Pages

sureSH's Birthday Calendar

Hi

I am creating a birthday calendar of all my friends and family. Can you please click on the link below to enter your birthday for me?

http://www.birthdayalarm.com/bd2/85586644a252847371b1527513648c92872468d1386

Thanks,
sureSH

மழைக் காதல்..

நீ குடை விரிப்பதற்குள்
உன்னை தொட்டு விட்ட
மழைத்துளிகளை பார்த்து,
இன்னும் கறுத்தது வானம்,
என் முகமும் தான்..
- sure

அமாவாசை அறியாச் சிறுமி..

அமாவாசை அறியாச் சிறுமி..
நிலவுத் தொலைந்துவிட்டதா?
எப்படி தொலைந்திருக்கும்?
நேற்றுக் கூட பார்த்தேனே?
நல்லாத் தானே இருந்தது?
யாருடனாவது சண்டையோ?
தனிக்கட்டை யாரோடு சண்டையிடும்?
நட்சத்திரங்கள் வம்பிழுத்திருக்குமோ?
நாலாப்பக்கத்திலும் இல்லையே?
கீழக் குதித்துத் தற்கொலை பண்ணியிருக்குமோ?
நாளிதழில் செய்தி வருமோ?
நிலவுக்கு என்னாச்சோ?
யாருமே கவலைப்படலையே?
அம்மா அடுப்படிக்குள்ளேயே?
அப்பா அலுவலகத்திலேயே?
நிலவு கண்ணாமூச்சி காட்டுதோ?
நாளைக்கு வந்திருமோ?
காத்திருக்கிறேன்..
- sure

இடமாற்றம்.

பசி வயிற்றை கிள்ளவில்லை,
பேருந்தில் இடையைக் கிள்ளியது..

கொடூரனின் காமப்பசி!

- sure

போனப் பின் ஏது?

அவன் பையில் ஒரு ரூபாய்!
எல்லோருக்கும், அவன் செல்லாக் காசு..

பிணத்தின் நெற்றியில் ஒரு ரூபாய்,
அத்தோடு, செல்லும் காசு..
- sure

நிறைவு..

என் நோட்டுப் புத்தகத்தில்
பலக் கவிதைகள்
முடித்தும்,
முடிவுப் பெறாமலே..
நீ ஒரு முறையாவது
படித்தால் தானே,
என் கவிதைக் கூட
"நிறைவு" பெறும்....
- sure

நான் யாரெனில்?

தினம் தினம் அவமானப்படுவேன்.
சுற்றத்தார் சுமத்தும் பழிகளை,
சுமைத் தாங்கியாய் சுமப்பேன்.
கணவன் கள்ளத்தொடர்பைக் கூட,
கண்ணியமாய் ஆதரிப்பேன்.
மாமியார் கொடுமைகளை
கண்ணீருடன் பெறுவேன்.
நாத்தனாரின் நடத்தையைக் கண்டு
உள்ளம் பொங்கி அழுவேன்.
குழந்தைகளுக்காகவே குமுறலுடன்
காலம் கழிப்பேன்.
ஒருநாள் வேறு வழியின்றி,
பொங்கி எழுவேன்.
வீட்டை விட்டு வெளியேறி,
கைநிறைய காசு பார்ப்பேன்.
கார், பங்களா எல்லாம்
கலர் கலராய் சொந்தமாக்குவேன்.
கணவனே வந்து காலடியில்
விழும்படி செய்வேன்.
நான் யாரெனில்,
பெண்களே கொஞ்சம் கண்ணீரை
துடைத்து விட்டு பாருங்கள்..
நானே,

"உம் சீரியல் நாயகி"!!!!!!!!!!!!
- sure
இனி
இழப்பதற்கு ஒன்றும் இல்லை
என்னையும் !
உன்னை பாராட்ட
தேடி அலையும் என் உள்ளதையும் தவிர !

தோழி

நேற்றுவரை எனக்கான மழை!
நீ போட்ட கவிதை விதையோ ! தோழி !!!
இன்று முதல்
இந்த கலை மழைக்கும் மட்டும் காதலன் இல்லை
தோழி நீ எழுதிய வரிகளுக்கும்
எழுத போகும் வரிகளுக்கும்
இந்த காதலன்....
உன் காதல் யாரிடமோ !
ஆனால் ? இந்த மழைக்காதலன் உன் ஒவ்வொரு வரிகளினுளும் ....

என் குருநாதர் " வைரமுத்து " அவர்களின் கவிதைக்கு அடுத்தபடி நான் மிகவும் ரசித்த கவிதைகள் உன் வரிகளடி தோழி !

இனி வரும் நாளில்
உன்சாயல் கவிதைகள் கூட வரும்
கலையின் மழைகாதல் வலையில்

மறவாமல் வந்து வாசித்து போ தோழி ....
இல்லையென்றால் என் வரிகள்
வாசனை இழந்து போகுமடி தோழி....
ஒரு முறை நின்று வாசி
இல்லையென்றால் உயிர் இழந்து போகும் !

உனக்கான வாயில் படி

நாணயத்திற்கு மட்டும் நாணயமானவர்..

செல்லும் பாதையில்,
நாணயம் ஜொலிஜொலிக்க..
கண்டும் காணாமல் நான்!
என் "நாணயதைக்" காப்பாற்றி..

அதே பாதையில்
கத்தையாய் நோட்டு,
சில்லறையாகிப் போனது
என் "நாணயம்"!!!
- sure

நீ அப்படி ஒன்றும் அழகில்லை

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணைல்லை
அவள் அப்படி ஒன்றும் கலர்ல்லை
ஆனால் அது ஒரு குறைல்லை
அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை
அவளை படித்தேன் முடிக்கவில்லை
அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை
இருந்தும் கவனிக்க மறக்கவில்லை
அவள் நாய் குட்டி எதுவும் வளர்க்கவில்லை
நான் காவல் இருந்தால் தடுக்கவில்லை
அவள் பொம்மைகள் அணைத்து உறங்கவில்லை
நான் பொம்மை போலே பிறக்கவில்லை
அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லை
அந்த காட்டில் தொலைந்தேன் மீளவில்லை
அவள் கை விரல் மோதிரம் தங்கமில்லை
கை பிடித்துடும் ஆசை தூங்கவில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
“எனக்கு எதுவும் இல்லை”
அவள் பட்டுப்புடவை என்றும் அணிந்ததில்லை
அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை
அவள் திட்டும் போதும் வலிக்கவில்லை
அந்த அக்கறை போல வேறு இல்லை
அவள் வாசம் ரோஜா வாசமில்லை
அவளில்லாமல் சுவாசம் இல்லை
அவள் சொந்தம் பந்தம் எதுவுமில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
“எனக்கு எதுவும் இல்லை”

காதல் காதல் காதல் மட்டுமே

அரிதாகவே நேர்கின்றன
உன்னை மறந்திருக்கும்
தருணங்கள்...

நீயற்ற பொழுதிலும்
கவிதை, பூ, ஓவியம்
ஏதேனும் ஒன்றிலிருந்து
நகைக்கிறாய்...

பேருந்து, திரையரங்கு, கடைவீதி என்று
எங்கேனும் ஒருத்தி
உன் சாயலில் தென்பட்டுவிடுகிறாள்...

யாரோ யாரையோ அழைக்கும்போது
என் நினைவின் வாசலில்
நீ வந்து நிற்கிறாய்...
(அது உன் பெயராக இருக்கும் பட்சத்தில்)

உன் பெயரை ஒற்றிக்கொண்டு
ஏதேனும் ஒரு வாகனம்
என்னை கடந்து செல்கிறது...

உன் பெயரில்
எங்கேனும்
ஒரு திரையரங்கு இருந்துவிடுகிறது...

உன்னை நியாபகபடுத்ததும் விதமாகவே
எல்லாம் நிகழ்கின்றன...

உன்னை சுற்றிய களைப்பில்
ஓய்வெடுக்கும் கண்களை
உறக்கத்திலும் வந்து இம்சிக்கிறாய்...

உன்னை கடந்து பயணிக்க
ஒருபோதும் முடியவே இல்லை...

முச்சறுந்த காலவெளியில்
நிகழ கூடும் என் பயணம்
உன் நினைவுகளுக்கு அப்பால்...

உனக்குப்பிடித்த எனது ஹைக்கூ.....

வெயில் சூட்டில்
உருகுது தங்கம்
என்னவள் தேகத்தில்
வியர்வை துளி..!!!!!!

காதல் வலிகள்..!!!!!!

நான் உன்னை காதலிக்கிறேன்
என்பதை தவிர எல்லாவற்றையும்
உன்னிடத்தில் சொல்லிவிட்டேன்
என்றே நினைக்கிறேன்......

நீ என்னை தானே காதலிக்கிறாய்
என்பதை தவிர எல்லாவற்றையும்
நீ என்னிடத்தில் இருந்து கேட்டு
தெரிந்து கொண்டாய் என்றும் நினைக்கிறேன்....

என் கவிதைகளை எல்லாம் நீ
படிக்கும் போது சந்தோசமாகத்தான் இருக்கிறது...

ஆனால் படித்து முடித்ததும் நீ
உன் ஒவ்வொரு கவிதைக்கு பின்னும்
யாரோ ஒரு பெண் இருக்கிறாள்
அது யாரென்று என்னிடத்திலேயே
கேட்கிறாய் எதுவுமே தெரியாதது போல்
என் முன்னால் அமர்ந்து கொண்டு.......
அது தானடி வலிக்கிறது அடி மனதில்...!!!

தோழிகளோடு ஆரவாரமாக பேசிக்கொண்டு
வரும் நீ என்னை கடக்கையில் மட்டும்
அமைதியாகி விடுகிறாயே...!!!
அதை பார்த்து தான் உறுதி செய்து கொள்கிறது
என் மனம் நீயும் என்னை காதலிக்கிறாய் என்று...

நீ என்னை கடக்கும் போதெல்லாம்
உன் கொலுசு கூட என் மீது இரக்கப்பட்டு
சில வார்த்தைகளை சிணுங்கி போகிறது
ஆனால் நீ........ ??????

ஒவ்வொரு சந்திப்பின் போதும்...
உன் புன்னகையை சிதறவிட்டு...
என் இதயத்தை அல்லவா
அள்ளிக்கொண்டு போகிறாய்.....!!!!

முற்றுப்புள்ளி வைக்காமல் தான்
முடிக்கிறேன் என் ஒவ்வொரு கவிதையையும்
உயிர் உள்ள காலம் வரை....
உன் நினைவு வற்றவா போகிறது என்னிலிருந்து.....!!!!!!

என் உயிர்க்கலந்த உறவே.....!!!!!

எண்ணங்களில் ஒரு வித விரிசல்...
என்னவென்றே புரியாத ஒரு மௌனம்....
நெஞ்சுக்குள் நெலிகிறது ஒரு சோகம்...
அதனால்தானோ என்னவோ....
இதயத்தில் ஒரு வித பாரம்......

இறக்கி வைக்க தெரியவில்லை...
யாரிடம் சொல்லவென்றும் புரியவில்லை.....
என் சோகம் பரிமாற உனையன்றி யாருமில்லை.....
ஆனால் உன்னிடமே சொல்வதற்கு
வழி ஏனோ தெரியவில்லை....

வலியோடு வருகிறேன்.....
உன் பாசமென்ற நங்கூரம் தேடி....!!!!

நாளெல்லாம் வருடிக்கொடு....
நயமாக பேசிவிடு.....
நிலை மாறிய மனதுக்கு
நீ ஒன்றே ஆறுதல்...!!!!

என் மௌனம் கலைக்கும் வித்தை
உனக்கு மட்டுமே தெரியும்..!!!!!!
என்னை மீண்டும் பழைய நிலைக்கு
கொண்டு செல்ல உன்னால் மட்டுமே முடியும்....!!!!!

சோகம் சுமந்த நெஞ்சோடும்....
கண்ணீர் சுமந்த கண்களோடும்....
உன் நிழல் தேடி வருகிறேன்......
எனக்கான அன்பு உள்ளமே.......

உன் தோள் மீது எனை சாய்த்து...!!!!!!!
சோகத்தை போக்கிவிடு.... மீண்டும் என்
வாழ்வை சுகமாக மாற்றிக்கொடு..!!!!!!

உன் அன்பான வார்த்தை கேட்டால்...
அல்லிப்பூவாய் என் முகம் மாறும்...!!!!!
ஆதரவாய் நீ பேச... என் அத்துனை
துன்பமும் அகன்றோடும்..!!!!!

அந்த ஒரு நம்பிக்கையிலே...
உன் அன்பை தேடிவரும்...
உன்னை புரிந்து கொண்ட ஜீவன் இது...!!!!!!!!

உன் நினைவிலும், உனக்காகவும் சில வரிகள்....!!!!!!

உனக்கு பிடிக்கவில்லை என்றாலும் கூட..
என்னால் மாற்றிக்கொள்ள முடியவில்லை
என்னை, ஏனென்றால் உன்னை காதலிக்க
எனக்கு பிடித்திருப்பதால்...!!!!!!


நீ காதல் செய்ய மறுப்பதால் எனக்கும் கூடத்தான்
கவிதை எழுத பிடிக்கவில்லை....
ஆனாலும் தொடர்கிறேன் ஏனென்றால்..
என் கவிதைகள் எல்லாம் உனக்கு பிடிப்பதால்....!!!!


பெரிதாக ஒன்றும் சிந்திப்பதில்லை நான்
எந்தக்கவிதை எழுத தொடங்கும் போதும்...
ஆனால் எழுதி முடித்து பார்க்கையில்
ஒரு சிறப்பான கவிதைக்குரிய சாயலிலே
முடிகிறது என் எல்லாக் கவிதையும்....


எப்படி சிறப்பு பெறாமல் இருக்கும்?? என்
எண்ணம் எல்லாம் வண்ணம் பூசி
உலா வரும் தேவதை நீயாக இருக்கையில்..!!!!


என் கவிதைகளை படித்தவர்களில்
பெரும்பாலோனோர் சொல்கிறார்கள்
என் கவிதைகளில் ஏதோ ஒரு வித
வித்தியாசத்தை உணர்வதாக....!!!!!


அவர்கள் சொல்வதும் உண்மைதான்
இருக்கலாம் இல்லை என்றால் வித்தியாசமான
உன்னை காதலியாய் தேர்வு செய்திருப்பேனா..???


ஒரு வித்தியாசத்திற்கு இன்று நீ ஒரு கவிதை
சொல் எனக்காக பார்க்கலாம்..
என்று நான் சொல்கையில்....
மெல்ல சிணுங்கி மெலிதாய் சிரித்தவாறே..
சொன்னாயே எனக்கும் சேர்த்து நீயே சொல்லிவிடேன்
என்று செல்லமாக கெஞ்சி..!!!


அந்த சிணுங்கலிலும், கெஞ்சலிலும் இருந்து தானடி
ஆரம்பமாகிறது என் அடுத்த கவிதைக்கான முதல்வரி...!!!!!!

காதல்(லி) அழகு தொகுப்பிலிருந்து...!!!!!!

தேவதையே...
தலைக்குக் குளித்துவிட்டு
கூந்தல் உலர்த்த மொட்டை மாடி
போகாதே என்றால் கேட்கிறாயா......
அங்கு பார் வான் மேகமெல்லாம்
ஈடு கொடுக்க முடியாமல்
எப்படி கலைந்து போகிறதென்று..!!!!!!

பூமகளே..
பூப்பறிக்க சென்ற நீ
மல்லிகையை மட்டும்
பறித்து விட்டு, திரும்பி விட்டாயாம்.....
அங்கு பார் ரோஜாக்களெல்லாம்.....
சோகத்தில் எப்படி சிவந்து கிடக்கிறதென்று..!!!!!

புன்னகை பூவே,
உன் வீட்டு மழலைக்கு
சோறூட்ட வெளியில் வந்து நீ
நிலவை புன்னகைத்தபடி
அழைக்காதே என்றால் கேட்கிறாயா....
அங்கு பார் உன் புன்னகைக்கு
ஈடு கொடுக்க முடியாமல் நிலவு மேகத்துக்குள்
மறைந்து கொண்டு முகம் காட்ட அஞ்சுவதை...!!!!!

மஞ்சள் நிலவே,
பனி விழும்...
மார்கழிக் காலையில் வாசல் தெளித்து
நீ போட்ட மாக்கோலம்...
உன் விரல் தொட்ட ஸ்பரிசத்திற்காகவா
இப்படி சிரிக்கிறது இந்த விடிந்த விட்ட காலையில்..!!!!

பொன் ரதமே...
நீ காலணி அணிந்து நடப்பதால்...
உன் மலர் பாதங்களை தாங்க முடியாத....
ஏக்கத்தில் இப்பூமி எப்படி கொதித்துப்போய்
கிடக்குது பார்..!!!!

புத்தம் புது தென்றலே...
புடவை கட்டி நீ கோவிலுக்கு போகும்
ஒவ்வொரு நாளும் குழம்பிப்போகிறார்கள்
பூசாரி முதல் பக்தர்கள் வரை அனைவரும்
உள்ளிருப்பது அம்மனா....!!! இல்லை
வழிபடும் நீ அம்மனா என்று....!!!!!

காதல் கண்மணியே..!!!!

என்னுடைய கற்பனையோடு
கைகோர்க்கும்.. உன்னுடைய
சின்னச்சின்ன நினைவுகளும்...
கவிதை என்ற அந்தஸ்தை
மிக இயல்பாய் பெற்று விடுகிறது...!!!!

நிறைய நிறைய சிந்தித்தாலும் கூட
நிறைவாய் ஒரு கவிதை உனக்கு
கொடுக்க முடியவில்லை என்ற
ஏக்கம் இருந்து கொண்டே இருக்கிறது
ஒவ்வொரு கவிதை எழுதி முடிக்கையிலும்..!!!!

எத்தனை கவிதை சொன்னாலும்
நான் கேட்டுக்கொண்டே இருப்பேன்
சொல்வது நீ என்றால்
என்று நீ என்றோ சொன்ன வார்த்தைதான்
இன்று வரையில் நிரப்பி கொண்டிருக்கிறது
என் டைரியின் பக்கங்களை..!!!!!

இன்றைய எனக்கான கவிதை எங்கே
என்று கேட்ட உன்னிடம்,
இல்லை என்று சொல்லிவிட்டு..
சற்று நேரம் கழித்து கொடுத்த கவிதைக்கு
நீ திட்டிக்கொண்டே கொடுத்த பாராட்டுதான்
தித்திப்பாய் இனிக்கிறது....
இன்று வரையில் என் இதயத்தில்..!!!!

சிந்திக்காமல் ஆரமித்து
சிறப்பாக முடிக்கப்படும் கவிதைகளுக்கு
இடையே வழிகாட்டி அழைத்துவந்த
உன் நினைவுகளை கலங்கரை விளக்கிற்கு
மேலாக ஒப்பிட்டாலும் தப்பில்லையடி...!!!!!!

காதல் வேண்டுகோள்..!!!!

உன் இமைக்குளத்தில்.....
நீந்திக் கொண்டிருக்கும்
இரு மீன்களோடு...
விளையாட என் இதயத்தையும்
அனுப்புகிறேன்... மூழ்கிப்போகாமல்
பார்த்துக்கொள்..!!!!

அவள் இப்படித்தான் ....!!!!

மிதக்கும் மேகம் கொண்டு
உருவாக்கிய சிற்பமா..
இல்லை இவள் பெண் என்ற பெயரில்
பூமிக்கு வந்த சொர்க்கமா.!!!
அழகு புதையல் கொட்டி கிடக்கும்
அட்சயபாத்திரம்... ஆண்களே !!!
இவளை கடக்கையில் இதயம் பத்திரம்....
நடை அழகு, உடை அழகு...
நான் பார்த்த இந்த பெண் அழகு.!!
விழி அழகு, மொழி அழகு .!!!
விருப்பமான உந்தன் பேச்சு அழகு ...
கருப்பு கூந்தல் காட்டினிலே
கவர்ச்சியான ரோஜா அழகு...!!!
வளமான சந்தனமும்...
வார்த்தெடுத்த குங்குமமும்...
முறையாக கலந்தது போல்
செழித்திருக்கும் உன் உடலழகு..!!!
பவழங்களை சேர்த்தெடுத்து
பார்குடத்தில் நனைத்தது போல்
பாவை உந்தன் பற்க்கலடி..!!!!
கேட்க்கும் இதயம் விரும்பும்
உந்தன் சொற்க்கலடி.!!!
பூமியில் பூத்த வெண்ணிலவு ..
உன்னழகை பார்த்து தேயும்
அந்த வானிலவு..!!!!!!




பாறை யாக்கி வைத்திருந்த..
என் இதயத்தை மெல்ல
பதம் பார்த்தவள் ...

பாலை விட வெண்மையான
மனம் படைத்தவள்....

இனிக்க இனிக்க பேசும்
இனியவள்...

நான் அறியா காதல் பாடம்
கற்று தந்தவள்...!!!!

நான் உன்னை காதலிக்கிறேன்..
என்று என்னிடத்தில் சொல்லாமலே...
என்னை காதலிக்க வைத்தவள்...

என் அன்பு காதலி..!!!!!

கவிதை

போதையில் விழுந்து கிடக்கிறான் என்று
வீதியில் செல்பவர்கள் கூறுகின்றனர்
பாவம் அவர்களுக்கு எப்படி தெரியும்
என் வீடே அதுதான் என்று!!!

அவள் பற்றியே அனைத்தும்

குங்குமம் எடுத்து
நெற்றியில் ஒற்றிக்கொண்டாய்!

உதிர்ந்த குங்குமமெல்லாம் ஓன்று சேர்ந்து
உன் மூக்கின் மேல் விழுந்து
ஆறுதல் கொண்டது!!

கரும்பலகை(BLACK BOARD)

கருப்பு என்றால் பலருக்கு வெறுப்பு
ஆனால் பலரின் எதிர்காலம்
என்னால் தான் என்றபோது
நான் அடைகிறேன் வியப்பு!!!

நினைவு பொக்கிசங்கள்......!!!!!!

பூக்கள் பறித்து அதில்
உன் வாசம் தேடிய நாட்களும்..

பூமியில் நடந்தால் கூட
ஏதோ வானத்தில் பறப்பதை
போல் உணந்த நாட்களும்....

உன் வீட்டு வாசலில் நீ
புள்ளி வைத்து என் மனதில்
கோலம் போட்ட நாட்களும்...

விழியால் பேசும் ஒரு வித
வித்தியாச உணர்வை
உணந்த நாட்களும்.....

மனதுக்குள் தோன்றிய
எண்ணங்களை எல்லாம்
மௌன பூட்டால் அடைத்து விட்டு
மனதுக்குள் அழுத நாட்களும்...

ஒரு சிறு பயணத்தை கூட...
நீண்ட பயணமாக மாற்றிய நாட்களும்..

உனக்கு மறந்திருக்கலாம்....
ஆனால் எனக்கு மறக்காது..!!! ஏனென்றால்

என்னை நீ பிரிந்து போன பின்பும்
நான் உன்னையே நினைத்திருக்க...!!!
தேவையான நினைவு பொக்கிசங்கள்
அவைகளெல்லாம்......!!!!!!

"பிரிவுகள் எல்லாம் நிரந்தரமல்ல"

கண்கள் மூடி உன் சிந்தனையில் லயித்திருந்தேன்

காற்று வந்து என் காதுக்குள் ஏதோ முணுமுணுக்க

நினைவாய் என்னுள் மறைந்த நீ நிஜமாய் எதிரில்

கால்கள் பின்னிக்கொள்ள தள்ளாடித் தவித்தேன்

நெருங்கி கைபிடித்து நெஞ்சோடு சேர்த்தணைதாய்

கன்னம் தொட்டு என்னை உன் புறம் திருப்பினாய்

முத்தமிட்டு கண்ணீர் முத்துக்களை உலரவைத்தாய்

நான் மயங்கிய நேரம் மடிகொடுத்து தாலாட்டினாய்

கலங்கிய போது கட்டியணைத்து ஆறுதல் சொன்னாய்

முன்நாள் பிரிவின் துயரம் அந்நாள் என்னில் இல்லை

கையசைத்து விடை கொடுத்தாய்

மீண்டும்........................... கண்கள் மூடினேன்

காற்று வந்து காதுக்குள் பேசியது


"பிரிவுகள் எல்லாம் நிரந்தரமல்ல"

உன் அன்பின் நினைவில்...!!!!!

நீ விரும்பாததை நான்
வெறுத்த போதும்...!!!

நான் விரும்புவதை நீ
நேசித்த போதும்...
உருவானது ஒரு இனிய உறவு...

என் தவறை நீ சுட்டி காட்டிய போதும்..
உன் கோபத்தின் பின் விளைவை
நான் விளக்கி சொன்ன போதும்....

முழு மனதோடு நாம் ஏற்று கொண்ட
பரஸ்பரத்திலேயே நீடிக்கிறது நம் உறவு...

நான் உன்னை மறக்க மாட்டேன்.....நீயும்
என்னை மறக்க கூடாது...என்று நீ சொன்ன
அன்பு கட்டளைக்கு அடி பணிந்து.....
ஆயுள் எல்லாம் காத்திருக்கிறேன்.....

நீயும் என்னை மறக்காமல்......
இருப்பாயா என்ற கேள்வி குறியோடும்???
உன் அன்பான நினைவோடும்...!!!!!!!!!

" ப்ரிய சகி "

" ப்ரிய சகி "
அருணாம்புயத்தும், என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும்
தருணாம்புயமுலைத் தையல் நல்லாள், தகை சேர் நனயணக்
கருணாம்புயமும், வதனாம்புயமும், கராம்புயமும்,
சரணாம்புயமும், அல்லால் கண்டிலேன், ஒரு தஞ்சமுமே...
~பட்டர்

வேறு :

இறுகப்பற்றின இருகைகளின் கொள்ளாமையால்
சிந்தவிட்ட நினைவுகள்
கால்வழியூர்ந்து கழுத்தை நிரைக்கிறது
கண்மணி.........

கடலின் நிழல் வீழுங்காயலில்
ஒரு காலை தூக்கித்தவஞ்செய்யுமொரு
சிறு கொக்காய் காத்திருக்கிறேன்...
நடக்கவொண்ணா மென்பாதங்களை
அறிந்தெடுத்து,
திருவுடலை திரு வோடாக்கி
வேண்டி வருந்துகையில்...

இது கேள்..!
நீ யென் யாசகம்.
பவதி பிச்ஷாந்தேஹி....!


ஏற்ற வற்றங்காணு மென்ணிமை பரப்பை
இழுத்துச்சுருக்கும் இரவினுக்கு
பருவச்சிறகை பரிசளிக்கிறேன்...!
ஆடைகளற்ற சுய தரிசனத்தை
பரிமாற்றி பெருயேப்பம் விடுகையில்
இதை சொல்வேன்..

.................................... சகி
நீ யென் சுயவின்பம்..!


சமாதியில்,
இடம் விட்டு படுத்திருக்கும் காலத்திற்கு
நீ முத்தமிட்ட காற்றை அனுப்பினேன்
முத்தங்களை வாங்கி~பின்
வளி வழி வலியனுப்பியது..
இவ்வாறு சகி.,

என்வானில்
தினமிரவில் நிகழுமோர்
சூரிய தற்கொலை..

இன்னதாவது..

நீ யென் கர்மா
ஊழ்'ன் வழியது வாழ்வு..


கானலின் சலனமாய் காண வாய்க்கிறாய்
எமபதியின் கொம்பிலமரும் காக்கையென
எத்தனிக்குங் காலத்திற்கு
பதில் கூற வேண்டியிருக்கிறது..

பத்திரப்படுத்திய மன்மத கணைகளால்
ஊடறுக்கிறேன்..

பிளந்த மாரினுள் நுழைந்து பார்..
உள்ளுருளும் வொன்றிற்கு.,
உன் பேர்...!

நீ யெனது இன்னுயிர்...!

ப்
ரி

ச கி..!!

காதல் பட்ட காரணத்தால்..

பஞ்சு மெத்தையில் நெஞ்சைக் குதறி
ரத்தம் ருசித்த
தாலிச்சரடும்.,
பிரண்ட தலையணையில்
உருண்டுப்படுத்து, என் தோளுடைத்த
கைவளையும்.,
வேர்வை ஊர்ந்து
"விர்" ரெனப் பிடித்த
விரல் நகக் கீறலும்.,
உன்னைச் சுவைக்க
உதட்டைச் சுவைத்து
உரசிக்கொண்ட மேல்வாய்ப் பல்லும்.,
முத்தம் மாற்றி, ரத்தம் மாற்றிய
இதழோரத்தில்
மென்வாய்ப்புன்னும்.,
வலிக்கவில்லையடீ....
காதல் பட்ட காரணத்தால்....

பஞ்சு வரை புகைத்து நெஞ்சை எரித்த..,
சிகரெட் கொப்பளங்கள்..!
உன் பேரெழுதி வெட்டப்பட்ட நரம்புகளால்..,
பிளேடுகளில் ரத்தத்துளி..!
உன் கைபட்டு கிழித்த என் கவிதை..,
ஹலால் செய்யப்பட்ட ஆட்டுத்தலை..!
தண்டவாள பிணங்களின் ரத்தம்.,
காக்கை வாயில் எச்சம்..!
என் கண் உகுத்த கண்ணீர்.,
உன் பாவாடை சேறு..!
சாக்கடை அரித்த சல்லடை தேக்கமாய்
காலம் கரைத்து எஞ்சிய காதல்
அடக்கிவைத்த ஆசைகளெல்லாம்..
கண்ணீராய் கொப்பளிக்க.,
காதல் பட்ட காரணத்தால்
வலிக்காத ரணமெல்லாம்....
வலிக்குதடி...
காயம் பட்ட காரணத்தால்..!

கிராமத்துக் காதலி

பணிக்காக பட்டணம் பயணப்பட்டவன்...
பண்டிகைக்காக மட்டும்
சொந்தக் கிராமம் நோக்கி பயணிக்கிறேன்...

பேருந்தில் ஏறி ஜன்னலோர
இருக்கைத் தேடி அமர்ந்து...
ஜன்னலின் திரைச்சீலை விலக்கினேன்..
தானாகவே விலகிக் கொண்டது
கூடவே எனது மனத்திரையும்.....

 ஏதோ சத்தம் கேட்டு
வெளியில் எட்டிப் பார்த்தேன்...
ஒரு குட்டி தேவதை
மிளிரும் புன்னகையோடும்,
மழலை பேச்சோடும்,
தன் தாயின் விரல் பிடித்து
நடக்கும் காட்சியை கண்டேன்....

அது பார்த்துக்கொண்டே இருக்கத் தூண்டும்
காட்சிதான் எனினும், வேகமாக முகம் திருப்பி,
இருக்கையில் சாய்ந்தேன்..!!!!!

பேருந்து முன்னோக்கியும்,
நினைவுகள் பின்னோக்கியும்,
ஒருசேரப் பயணப்பட்டது....!!!!

அந்த பிஞ்சு மழலையின் பேச்சு,
உன்னுடனான ஆரம்பக்கல்வி
காலங்களை நினைவு படுத்த
அதில் மூழ்கியபடி கண் அயர்ந்தேன்..

வெளியில் மீண்டும் சத்தம்
என்னவென்று கதவு திறந்தேன்...!!!!
மேகத்தோடு தென்றலும்,
என் இதயத்தோடு உன் நினைவுகளும்,
ஒரு சேர மோதி இரு வேறு துளியாய்
வெளிப்பட்டது வெளியில் மழையாகவும்,
விழியில் கண்ணீராகவும்....

ஒன்று உனக்கு பிடித்த மழை,
மற்றொன்று எனக்கு பிடித்த உன் நினைவுகள்..
எனவே இரண்டையும் ரசித்தபடி,
பயணம் தொடர்ந்தது.....!!!

உயர்க்கல்வியில் உடைந்த நம்நட்பு
கல்லூரியிலும் கை கூடாமல்
போனதை நினைத்து கொண்டும்,

சில வருடம் பார்க்காமலும்,
பல வருடம் பேசாமலும்,
கடந்த போன நாட்களின்
வறட்சி கண்களில் மீண்டும் நீர் வார்க்க,
சுகமான பயணமும் முடிவுக்கு வர...,

கீழிறங்கி பார்வை வீசினேன்....
கண் அளக்கும் தூரத்தில் எப்போதும்போல.....
உன் சாயலில் ஒரு பெண் முகம் தெரிய
நடையை தொடர்கிறேன்....
அது நீயாக இருந்து விட மாட்டாயோ?
என்ற கேள்விக்குறியோடும்? எதிர்பார்ப்போடும்?
உன் மீதான அதே பழையக் காதலுடன்....!!!!!!