Pages

Showing posts with label sure4an. Show all posts
Showing posts with label sure4an. Show all posts

நினைவுகள் I TrenDing Now

நினைவுகள்

@sure4an

 நல்ல நினைவுகளாக

இருந்தாலும் சரி கெட்ட

நினைவுகளாக இருந்தாலும் சரி

நினைவுகள் எப்போதும் நம்மலோடுதான் இருக்கும்..

மறக்க இயலாது.

நினைவுகள் வீடியோ 


ஒவ்வொரு காதல் நினைவும் விசேஷமானதுதான்... 

அதிலும் முதல் முறையாக காதலை உணரும்போதும்,

அந்த உணர்வை காதலியிடம்

அல்லது காதலனிடம் சொல்லும்போது ஏற்பட்ட சந்தோஷம், 

பதட்டம், உணர்ச்சிப் தடுமாற்றம் ... 

எல்லாம் மறக்க முடியாத 

பசுமையான நினைவுகள்.


நாட்கள் கடந்து போனாலும் இன்றும் கனமாகதான்

இருக்கிறது மனது.. 

கலைந்து

போனாலும் கனவாக

இருக்கிறது நினைவு..!


தொலைத்த இடமும்

தெரிகின்றது..

தொலைந்த

பொருளும் தெரிகின்றது..

வலியும் உணரப்படுகிறது..

ஆனால் திருப்பி மீட்கத்தான்

முடியவில்லை.

எல்லாமே நினைவுகளாக.


நிஜங்கள் தரும் சந்தோஷத்தை

விட நினைவுகள் தரும்

சந்தோஷம் அதிகம்..

அதனால் தான் நிஜங்கள்

நிலைப்பதில்லை நினைவுகள்

என்றும் அழிவதில்லை.


முகவரி இன்றி முடிந்து போன

உறவுகளிடம் தான் முடங்கி

விடுகிறது நம் நினைவுகள்.


பிடிப்பதற்கு காரணம் இருந்தும்

பிடிக்காமல் போகிறது சிலரை..

வெறுப்பதற்கு காரணம்

இருந்தும் வெறுக்க

முடியவில்லை சிலரை..!


நிஜம் ஒரு நொடி வலி 

நினைவு

ஒவ்வொரு நொடியும் வலி.

மறக்க இயலாமல் வலியுடன்

நினைவுகளை சுமப்பதில்

உள்ளது உண்மையான அன்பு.


உணர்வுகளை நினைவுகளாய்

சேமிக்கும் மனிதர்கள் நாம்..

உணர்வுகளும் குறைய

போவதில்லை.. நினைவுகளும்

முடிய போவதில்லை..


மிக அழகானது சிலரின்

நினைவுகள்.

இது என்னவலுக்காக


உனது நினைவுகளால் நான்

அழிந்து போனாலும்..

உன் நினைவுகள் என்றும்

என்னை விட்டு அழிவதில்லை..!


தனக்காக அழுத பெண்ணையும்

தன்னை அழ வைத்த

பெண்ணையும் ஆண்கள்

ஒருபோதும் மறப்பதில்லை.


என் வாழ்க்கையில் மறக்க

முடியாத நிமிடங்களை உன்னோடு

வாழ்ந்து விட்டேன் இந்த

நினைவுகள் ஒன்றே போதும்

என் உயிர் நீங்கும் வரை..!


உனக்கு என் நினைவு வந்தால்

 உன் இதயத்தைத் தொட்டுப்பார்

நான் துடிப்பேன்..

உன் நினைவுகளோடு.



இறந்து கொண்டிருக்கும்

ஒவ்வொரு நொடியையும்..

என்றும் உயிர்ப்புடன்

வைத்திருப்பது என்னை

நீங்கா உன் நினைவுகள் மட்டுமே..!

காதல் கவிதை | RJ Malar | Trending

காதல் கவிதை  | Trending

RJ Malar

கற்காலம் முதல்
இந்த கணினி காலம் வரை 
இந்த காதல் சொல்லப்படும் 
விதம் மாறுபட்டதே தவிர 
காதலுக்காக எழுதப்படும் 
கவிதைகள் தொடர்ந்து 
கொண்டுதான் இருக்கிறது.
அப்படி தன் காதலி மேல்
கொண்ட பிரியத்தால்
அந்த பிரியன் 
எழுதிய வரிகள் இதோ....





நின்
அருகாமையில் வேகமாகவும்
தூரத்தில் மெதுவாகவும்
சுழல்வதுமாய் உலகம்;
உன்னால்
பைத்தியமாகிவிட்டது அதுவும்!

*

உன்னில் பாதியாய்
என்னில் மீதியாய்
நம்மில்
முழுதும் காதல்!

*

காதலிப்பதற்கு
நீ இருக்கிறாய்
என்ற காரணமே
போதுமாயிருக்கிறது
நான் தொடர்ந்து சுவாசிப்பதற்கு!

*

வெகுநாட்கள் கழித்து
சந்திக்கும் கணத்தில்
நம் விழி பொங்கும் 
கண்ணீரில்
கப்பல்விடக் காத்திருக்கிறது
காதல்!

*

உன்
கண்மையைக் கொடு;
மைப்போட்டு பார்க்கலாம்
உன்னில் தொலைந்த
என்னிதயத்தை!

அவளின் நினைவுகள் I Ishu I Trending Memories

அவளின் நினைவுகள் 

என் மனம் என்னும் சிப்பிக்குள் 

முத்துபோல் சேமித்து வைத்தேன்

அவளின் நினைவுகளை  

அவளின் நினைவுகளை

For more videos Subscribe My channel

https://bit.ly/3iJ8QRx

என் வாழ்க்கை பிரகாசமாய் 

ஒளிரும் என்று நம்பியிருந்தேன் 

ஆனால் - இன்றோ 

நான் சேர்த்து வைத்த நினைவுகள் எல்லாம் 

என்னை சேதப்படுத்துகிறது 


பேருந்தின்  ஜன்னலோர பயணத்தில் 

கார்மேகம் பொழியும் மழையை கூட ரசிக்க முடியவில்லை 


மேகம் கடந்து மழை துளி நின்ற போதிலும் 

காலம் கடந்த உன் நினைவுகள் 

கண்ணீர் துளியாய் சிந்துகிறது

உன்னோடு பயணம் செய்த 

நாட்களை நினைக்கும் போது 


உன் நினைவுகளின் வலியால் 

நான் துடிக்கிறேன் 

மரிக்கிறேன்...


பெருமை


மற்றவர்களோடு உன்னை ஒப்பிடுவது - உனக்கு
பெருமை சேர்க்காது...!!!
நீ பேசுகின்ற வார்தைகளும்...
செய்கின்ற செயல்களுமே - உனக்கு
பெருமை சேர்க்கும்...!!!
@sure4an

தமிழன் வீழ்வது ஒருசில _____களால் மட்டுமே,,,


தமிழன் வீழ்வது ஒருசில _____களால் மட்டுமே,,,
அவன் பிழைக்க சாதியை கையில் எடுப்பான்,,

#நன்றாக சிந்தியுங்கள்,,,,
ஊர் எல்லையை தான்டினால் இங்கு யாரும், யாரையும் என்ன நீ சாதி என்று கேட்கபோவதில்லை, கேட்க போவதும் இல்லை,,,
ஷேர் ஆட்டோ ஆரம்பித்து, விமானம் வரை, சாதி என்பது அழிந்து விட்ட ஓன்று.
ஒருசில சில இடங்களில் மட்டுமே ஊர் எல்லைவரை அது தொடர்கிறது,,,
இது போன்ற ஒரு சில எச்சைகள்,,,, பிச்சை காசுக்காக அனைவரிடத்திலும்,, அதை மீண்டும் பரப்பும் வேலையை செய்கின்றனர்,,,
பன்றியின் கத்தலை கல்லால் அடித்து துரத்திவிட்டு தமிழனாக ஒன்றிணைவோம்,,,
@sure4an

அன்பா இருங்க



அன்பா இருங்க தவறில்லை அந்த அன்புக்காக அடிமை ஆகிடாதீங்க.! உங்களை கண்ணீரிலேயே கரைத்துவிடும்...
@sure4an