Pages

Showing posts with label RJ Malar. Show all posts
Showing posts with label RJ Malar. Show all posts

அன்பானவளின் அன்பு கவிதை I RJ Malar I TrenDing Now

அன்பானவளின் அன்பு கவிதை 

RJ Malar

அன்பானவர்களுக்காக இறங்கிபோவதும்

தவறில்லை...

நம் அன்பு புறியாதவர்களிடமிருந்து

விலகி போவதும் தவறில்லை...



ஒரு ஆணின் உண்மையான அன்பை

ஒரு பெண் உணர்ந்து விட்டால்... 

அவள்...அவனிடம் ..

எதையும் மறைப்பதும் இல்லை...

மறுப்பதும் இல்லை...


ஒருவரின் அன்பை நீ அலட்சியப்படுத்தும் போது

உனக்கு தெரியாது..

அதே அன்பிற்காக 

ஏங்கும் போதுதான் தெரியும்


யார் இதயத்தில் நாம் இருக்கிறோம்

என்பதைவிட

யார் இதயத்தையும் நாம் காயப்படுத்தாமல்

இருக்கிறோம் என்பதே சிறப்பு


மீண்டும் மீண்டும் நினைக்க தோன்றும்

கடந்த காலத்தின் சில நினைவுகள்தான்

நம் வாழ்வின் வசந்த காலம்


அன்பும் ஒருவித போதைதான்

ஒருமுறை ருசித்துவிட்டால்

அடிமையாகிவிடுகிறது மனது


பிடிதவர்களுடன் சண்டை போடுவது

அவர்களை பிரியவேண்டும்

என்பதற்காக அல்ல - எப்போதும் 

பிரிந்திட கூடாது என்பதற்காக

RJ மலரின் வாழ்க்கை

வாழ்க்கை

என் மனதின் காயங்களுக்கு

யார் காரணம் என கேட்டால்

என்னுடைய எதிர்பார்ப்புகள்

என்பதே உண்மை



சரியான நேரத்தில் அனைத்தும் 

உன்னை வந்து சேரும்

கவலை கொள்ளாதே


தேவையில்லாமல் பேசுவதைவிட

அமைதியாகவே இருந்துவிடலாம்


நம் மனது புரியாத யாருக்கும்

நம் வார்த்தைகளும்

புரியாது


மணம் முடிக்கும் வரை

நேசிப்பது காதலில்லை

மரணம் வரை நேசிப்பதுதான்

உண்மை காதல்


நிறுத்தவும் முடியாமல்

தொடரவும் முடியாமல் 

சில தேடல்கள்


நெருங்கவும் முடியாமல்

விலகவும் முடியாமல்

சில உறவுகள்


சொல்லவும் முடியாமல்

கொல்லவும் முடியாமல்

சில ஆசைகள்


மறுக்கவும் முடியாமல்

வெறுக்கவும் முடியாமல்

சில நினைவுகள்


மாளிகையோ குடிசையோ

எங்கே வாழ்கிறோம்

என்பதல்ல வாழ்க்கை

நாம்

எங்கே சந்தோசமாக வாழ்கிறோம்

என்பதுதான் வாழ்க்கை...

காதல் கவிதை | RJ Malar | Trending

காதல் கவிதை  | Trending

RJ Malar

கற்காலம் முதல்
இந்த கணினி காலம் வரை 
இந்த காதல் சொல்லப்படும் 
விதம் மாறுபட்டதே தவிர 
காதலுக்காக எழுதப்படும் 
கவிதைகள் தொடர்ந்து 
கொண்டுதான் இருக்கிறது.
அப்படி தன் காதலி மேல்
கொண்ட பிரியத்தால்
அந்த பிரியன் 
எழுதிய வரிகள் இதோ....





நின்
அருகாமையில் வேகமாகவும்
தூரத்தில் மெதுவாகவும்
சுழல்வதுமாய் உலகம்;
உன்னால்
பைத்தியமாகிவிட்டது அதுவும்!

*

உன்னில் பாதியாய்
என்னில் மீதியாய்
நம்மில்
முழுதும் காதல்!

*

காதலிப்பதற்கு
நீ இருக்கிறாய்
என்ற காரணமே
போதுமாயிருக்கிறது
நான் தொடர்ந்து சுவாசிப்பதற்கு!

*

வெகுநாட்கள் கழித்து
சந்திக்கும் கணத்தில்
நம் விழி பொங்கும் 
கண்ணீரில்
கப்பல்விடக் காத்திருக்கிறது
காதல்!

*

உன்
கண்மையைக் கொடு;
மைப்போட்டு பார்க்கலாம்
உன்னில் தொலைந்த
என்னிதயத்தை!