Pages

உன் அன்பின் நினைவில்...!!!!!

நீ விரும்பாததை நான்
வெறுத்த போதும்...!!!

நான் விரும்புவதை நீ
நேசித்த போதும்...
உருவானது ஒரு இனிய உறவு...

என் தவறை நீ சுட்டி காட்டிய போதும்..
உன் கோபத்தின் பின் விளைவை
நான் விளக்கி சொன்ன போதும்....

முழு மனதோடு நாம் ஏற்று கொண்ட
பரஸ்பரத்திலேயே நீடிக்கிறது நம் உறவு...

நான் உன்னை மறக்க மாட்டேன்.....நீயும்
என்னை மறக்க கூடாது...என்று நீ சொன்ன
அன்பு கட்டளைக்கு அடி பணிந்து.....
ஆயுள் எல்லாம் காத்திருக்கிறேன்.....

நீயும் என்னை மறக்காமல்......
இருப்பாயா என்ற கேள்வி குறியோடும்???
உன் அன்பான நினைவோடும்...!!!!!!!!!

No comments:

Post a Comment