Pages

காதல் பட்ட காரணத்தால்..

பஞ்சு மெத்தையில் நெஞ்சைக் குதறி
ரத்தம் ருசித்த
தாலிச்சரடும்.,
பிரண்ட தலையணையில்
உருண்டுப்படுத்து, என் தோளுடைத்த
கைவளையும்.,
வேர்வை ஊர்ந்து
"விர்" ரெனப் பிடித்த
விரல் நகக் கீறலும்.,
உன்னைச் சுவைக்க
உதட்டைச் சுவைத்து
உரசிக்கொண்ட மேல்வாய்ப் பல்லும்.,
முத்தம் மாற்றி, ரத்தம் மாற்றிய
இதழோரத்தில்
மென்வாய்ப்புன்னும்.,
வலிக்கவில்லையடீ....
காதல் பட்ட காரணத்தால்....

பஞ்சு வரை புகைத்து நெஞ்சை எரித்த..,
சிகரெட் கொப்பளங்கள்..!
உன் பேரெழுதி வெட்டப்பட்ட நரம்புகளால்..,
பிளேடுகளில் ரத்தத்துளி..!
உன் கைபட்டு கிழித்த என் கவிதை..,
ஹலால் செய்யப்பட்ட ஆட்டுத்தலை..!
தண்டவாள பிணங்களின் ரத்தம்.,
காக்கை வாயில் எச்சம்..!
என் கண் உகுத்த கண்ணீர்.,
உன் பாவாடை சேறு..!
சாக்கடை அரித்த சல்லடை தேக்கமாய்
காலம் கரைத்து எஞ்சிய காதல்
அடக்கிவைத்த ஆசைகளெல்லாம்..
கண்ணீராய் கொப்பளிக்க.,
காதல் பட்ட காரணத்தால்
வலிக்காத ரணமெல்லாம்....
வலிக்குதடி...
காயம் பட்ட காரணத்தால்..!

No comments:

Post a Comment