Pages

காதல் கண்மணியே..!!!!

என்னுடைய கற்பனையோடு
கைகோர்க்கும்.. உன்னுடைய
சின்னச்சின்ன நினைவுகளும்...
கவிதை என்ற அந்தஸ்தை
மிக இயல்பாய் பெற்று விடுகிறது...!!!!

நிறைய நிறைய சிந்தித்தாலும் கூட
நிறைவாய் ஒரு கவிதை உனக்கு
கொடுக்க முடியவில்லை என்ற
ஏக்கம் இருந்து கொண்டே இருக்கிறது
ஒவ்வொரு கவிதை எழுதி முடிக்கையிலும்..!!!!

எத்தனை கவிதை சொன்னாலும்
நான் கேட்டுக்கொண்டே இருப்பேன்
சொல்வது நீ என்றால்
என்று நீ என்றோ சொன்ன வார்த்தைதான்
இன்று வரையில் நிரப்பி கொண்டிருக்கிறது
என் டைரியின் பக்கங்களை..!!!!!

இன்றைய எனக்கான கவிதை எங்கே
என்று கேட்ட உன்னிடம்,
இல்லை என்று சொல்லிவிட்டு..
சற்று நேரம் கழித்து கொடுத்த கவிதைக்கு
நீ திட்டிக்கொண்டே கொடுத்த பாராட்டுதான்
தித்திப்பாய் இனிக்கிறது....
இன்று வரையில் என் இதயத்தில்..!!!!

சிந்திக்காமல் ஆரமித்து
சிறப்பாக முடிக்கப்படும் கவிதைகளுக்கு
இடையே வழிகாட்டி அழைத்துவந்த
உன் நினைவுகளை கலங்கரை விளக்கிற்கு
மேலாக ஒப்பிட்டாலும் தப்பில்லையடி...!!!!!!

No comments:

Post a Comment