Pages

நினைவு பொக்கிசங்கள்......!!!!!!

பூக்கள் பறித்து அதில்
உன் வாசம் தேடிய நாட்களும்..

பூமியில் நடந்தால் கூட
ஏதோ வானத்தில் பறப்பதை
போல் உணந்த நாட்களும்....

உன் வீட்டு வாசலில் நீ
புள்ளி வைத்து என் மனதில்
கோலம் போட்ட நாட்களும்...

விழியால் பேசும் ஒரு வித
வித்தியாச உணர்வை
உணந்த நாட்களும்.....

மனதுக்குள் தோன்றிய
எண்ணங்களை எல்லாம்
மௌன பூட்டால் அடைத்து விட்டு
மனதுக்குள் அழுத நாட்களும்...

ஒரு சிறு பயணத்தை கூட...
நீண்ட பயணமாக மாற்றிய நாட்களும்..

உனக்கு மறந்திருக்கலாம்....
ஆனால் எனக்கு மறக்காது..!!! ஏனென்றால்

என்னை நீ பிரிந்து போன பின்பும்
நான் உன்னையே நினைத்திருக்க...!!!
தேவையான நினைவு பொக்கிசங்கள்
அவைகளெல்லாம்......!!!!!!

No comments:

Post a Comment