Pages

நெஞ்சே வழி விடு



பாதையோரம் உந்தன்
காதல் போக.....
அந்தப் பாதையோரம்
எந்தன் கால்கள் போகும்.
நெஞ்சே... வழி விடு.
நான்தான்... விடை கொடு.!

மெளனம் என்னைக் கொல்லுதே...
என்மனமே உன்னை நாடுதே.
இரவில் காணும் கனவிலே...
அடிமையாகிறேன் உன் பேச்சிலே.!

கண்கள் திறந்தால் உன் நினைவுகள்...
நிழலாய்த் தோன்றி மறையுதே.
தினமும் காலை தவிக்கிறேன்...
வரமாய் உன்னை அடையவே.!

கண்கள் பார்க்குது கண்ணாடி _ அதில்
தெரியுது உன்விம்பம் முன்னாடி.
புன்னகை தவழும் பூவே _ உன்னைப்
புரிஞ்சுக்க முடியல என் மனசே.!

என் இதயத்தைத் தேடி வந்தவளே...
ஏன் இன்னும் தயக்கம் புரியவில்லே.
தவம் இருந்தேன் உன்னையடைய...
தரிசனமாய் வந்தாய் என்னருகே.!

No comments:

Post a Comment