Pages

நம்மிடம் இருப்பதெல்லாம்

நான் உன்னிடம்
ஓன்றே ஒன்றுதான்
கேட்டேன் ..........
அது உன் நட்பு
மட்டும்தான் ............
நீ உன் நட்பை தர யோசித்தால் .........
நான் என் உயிரை விட யோசிகமடேன் .....
ஆனால் என் உயிரை விட்டு
உன்னை யோசிக்க வைப்பேன் ..........
இவன் நட்பு கிடைக்கவில்லை என்று............. ..

-----------------------x-sure-x------------------------

நீயும்
என்னருகில் இல்லை..
நானும்
உன்னருகில் இல்லை...

நீயும்
என்னை பார்த்ததில்லை..
நானும்
உன்னை பார்த்ததில்லை...

நீயும்
என்னிடம் எதையும் பகிர்ந்ததில்லை..
நானும்
உன்னிடம் எதையும் பகிர்ந்ததில்லை...

நீயும்
என் சந்தோஷங்களை கண்டதில்லை..
நானும்
உன் சந்தோஷங்களை கொண்டாடியதில்லை...

நீயும்
என் வருத்தங்களில்
என் கைகளை பிடித்து கொண்டதில்லை..
நானும்
உன் வருத்தங்களில்
உன் கைகளை பிடித்து கொண்டதில்லை...

நீயும்
எந்த மழை நாளிலும்
என்னோடு நடந்ததில்லை..
நானும்
எந்த மழை நாளிலும்
உன்னோடு நடந்ததில்லை...

நம்மிடம்
இருப்பதெல்லாம்
நாம்
என்று நம்மை சொல்லவைக்கும்
ஒரு சின்ன நட்பு மட்டுமே....

No comments:

Post a Comment