Pages

என்மடியில் பூத்த நிலா (பூ)....

பகல்பொழுது விடியும்வரை
என்விழிகள் விழித்திருக்கவில்லை
எந்தன்மடி மீதினில்நீ
தலைசாய்த்து இருந்தபோதும்
என்விழிகளும் என்னைமறந்து - தானாய்
ஏனோதுகில் கொள்ளதொடங்கியது...


சிலமணி நேரங்கள்
நம்முதடுகள் நம்முடைய
வாழ்வின் நிகழ்வுகளை
பகிர்ந்துகொண்டே இருக்க
என்உதடுகள் உன்நெற்றியில் - புள்ளியாய்
கோலம்போட தொடங்கியது...


இடக்கைவிரல்கள் இடையிடையே
உச்சம்தலை வரைகேசத்தை
நேசமாய் வருடிகொண்டிருக்க
வலக்கைவிரல்கள் உன்இடக்கை
விரல்களோடு பத்தாக - ஒன்றாய்
மெல்ல இணையதொடங்கியது...

இரவின் நிசப்தம்எங்கும்
நமக்குள்ளும் படரதொடங்கியது
அப்பொழுது புரியவில்லை
பின்புதான் அறியநேர்ந்தது
இணைந்தது நம்மிதழ்களும் - மென்மையாய்
நம்மையறியாமலே என்பதனை...

- sure

நீவருவாயென...

சூரியனைபார்த்து மலரும்
செந்தாமரை மலராய்
அல்லாமல்...

உந்தன் முழுமுகம்
புதைத்து துயர்வின்றி
உறங்கவைக்க...

நிலாவே உனக்காக
என்மார்பும் பூத்து
காத்திருக்கிறது...

வெண்ணிலவே!!!
உறங்க வாரோயோ...
இறங்கி வருவாயோ
மயங்கி போவாயோ...

- sure

?????

மஞ்சத்தின் மீது
பஞ்சணையாய் நினைத்து
நெஞ்சத்தில் உறங்கும்போது
எந்தன் வலப்பகத்தில் - நித்தம்
தலைசாய்த்து துகில்கொள்...

ஏனெனில்!
உயிராக என்னிதயத்தில்
உள்ளேவாழும் நீயாகிய
உனக்கு மெல்ல
உந்தன் சிரமோ?
உந்தன் கரமோ? -
உரசினாலும்கூட வலிக்ககூடும்...


இல்லையேல்...
இடப்பகத்தில் ஒலிக்கும்
இதயதுடிப்பின் ஓசையாகிய
உன்பெயரே மெல்ல
உன்தூக்கத்தை கெடுக்ககூடும்...

- sure

மழையின் முத்தம்...

இன்றைய பொழுதின்
முடிவோ?
இல்லை...
நாளைய பொழுதின்
தொடக்கமோ?
கேள்விக்கு விடைத்தெரியாத
நேரம்!
பயணமும் வாழ்க்கையும்
நள்ளிரவில்...

என்னை நனைப்பது
உந்தன் மொழியின்
வார்த்தைகளா?
இல்லை....
பெய்யும் மழையின்
பொழியும் சாரலின்
துளிகளா?
ஈரமும் கதகதப்பும்
என்னோடு...

கார்மேகம் தூவிடும்
பூவிதழ்களாய் தூறல்
என்மேனியை கொஞ்சம்
கொஞ்சமாய் தீண்டிட...
தேன்சொட்டாய் ஒவ்வொரு
துளியும் உன்னைபோல்
என்னையும் மண்ணையும்
ஆக்கிரமிக்க தொடங்கிட...

எங்கிருந்தோ குறிவைத்து
எய்யபட்ட அம்பாய்
எங்கிருந்தோ பிறந்து
என்னுதட்டில் விழுந்து
என்னை அதுவும்
ஏகாந்தத்தில் வீழ்த்தியது
எனக்கு நீயளிக்கும்
முத்தத்தினை போல....

- sure

நண்பர்

ஒரேகருவறையில் பிறக்கவில்லை
ஈகரையில் இணைந்தோம்
அக்கறையை பகிர்ந்தோம்
எக்கரையிலோ இருந்தபோதும்...

இலங்கையில் பிறந்த
இராமன் நீ
இந்தியாவில் பிறந்த
விபிஷ்ணன் நான்

மதம் வேறாக இருக்கலாம்...
மனம் ஒன்றுதான் நமக்குள்...
எம்மதமும் சம்மதம்
எண்ணம் நமக்குள்...

நித்தம் பேசாமல்
போனாலும் உன்னோடு
பாசம் இல்லாமல்
போகாது என்னோடு...

கடல்கடந்து வாழ்ந்தாலும்
என்வாசமும் சுவாசமும்
நம்மை அறியாமலே
கலந்திருக்கும் காற்றினில்...

வாழ்வதற்கு பணம் தேவை...
வாழ்வில் குணம் தேவை...
வாழ்க்கைக்கு ஓர்துணை தேவை...
வார்த்தையில் பலமுறை கூறியவனே...

வாழ்வில் உனக்காவது
மணம் முடித்துகொள்ள
நான் ஆசைபடுகிறேன் - அதற்கு
உன்வரவினை எண்ணி...

- sure

யானையே!!!

நேற்றுவரை...
மைசூர் என்றால்
தசரா ஞாபகம்
தசரா என்றால்
உந்தன் ஞாபகம்

நீ என்றால்
உன்னழகு ஞாபாகம்
உன்னழகு என்றால்
காட்சிகள்பல ஞாபகம்

இன்றும்...
உந்தன் ஞாபகம்...
ஆனால் கொள்ளையடித்த
உன்னழகு கொலைசெய்ய
துவங்கியது ஏனோ?

காட்டை நாங்கள்
ஆக்கிரமிக்க தொடங்கியதால்
காட்டைகாக்கும் பொருட்டு
ஒருநாள் அடையாள
போராட்ட சின்னமாய்
நாட்டிற்குள் புகுந்தீரோ?
காட்டிற்குள் மரத்தை
முறிக்கும் நீங்கள்...
நாட்டிற்குள் வாகனத்தை
உடைத்தது ஏனோ?
செல்லும் பாதையில்
தடையாக இருந்ததாலோ? - எங்களும்
ரெளடிதனம் பண்ணதெரியும்
என்பதை காட்டவோ?

பணப்பெட்டி இயந்திரத்துக்கு
காவலன் அவன்...
உங்கள் தேவையது இல்லாதபோது
அவனை கொன்றதுஏனோ?
மனிதர்கள் நாங்கள்
பலபேர் மிருகமாகிறோம் - மிருகம்
நீங்கள் மனிதர்கள்போல்
மாறியதும் ஏனோ?

வாய்பேசும் மனிதனையும்
வாய்பேசா உன்னைபோன்ற
கால்நடையும் குத்தி
கொல்ல காரணமெதுவோ?

- sure

மலர் பேசும் வார்த்தைகள்...

அழகிற்காக என்னை
இறைவனும் பெண்களும்
சூடிமகிழ்ந்தாலும் எந்தன்
வாசனையில் மட்டும்தான்
பெருமை தெரிகிறது...
அழகாய் பிறந்தநாங்கள்
அத்தனை பேரும்
இறைவனையும் சேருவதில்லை
பெண்களும் சூடுவதில்லை...
உன்கைகளில் என்னைநீ
ஏந்திரசிக்கவே ஒருஇரவு
மட்டும் உயிர்வாழ்ந்தாலும் - உனக்காக
மலர்ந்திட துடிக்கிறேன்...

- sure

மனம் மாறிய வேளை...

என்கனவில் அவள் வந்தாள்
என்னருகில் மெல்ல அமர்ந்தாள்
என்னையே உனக்கு தந்துவிட்டேன்
உன்முன்னே நானடிமையென நின்றேன்...

என்னைபார்த்து என்னிடம் கேட்டாள்
என்னை என்னவெல்லாம் செய்யபோகிறாயென்று?
உன்னை என்னவெல்லாம் செய்யவேண்டுமென்று
சொல்லென்றேன் ஒவ்வொன்றாய் என்காதில்...

நாணலாய் வெட்கத்தில் தலைகுனிந்தாள்
பெண்ணினம் சொல்லிடமறுக்கும் பதில்தான்
ஆணினம் செய்திடநினைக்கும் செயல்தான்
என்றென மனதுக்குள் எண்ணிக்கொண்டேன்...

நீநினைக்கும் எந்தவொரு ஆசையையும்
நிறைவேற்றிட என்மனம் துடிப்பதையும்
இரட்டிப்பாய் செய்வித்து உன்னை
வீழ்த்திட நினைப்பதையும் அறிந்திடுஎன்றேன்...

என்விரல் பிடித்து
என்கேசம் கோதி
அவளிதழ் அசைய
தென்றல் காற்றாய்
எண்ணங்களை ராகமாக்கி
இசையாய் ஒலித்தாள்...

பட்டியல் முற்றுபெறும்
முன்னே என்னிதயத்தை
காகிதமாக்கிய வரிகளை
அவள்கையில் திணித்தேன்...

எந்தன் காகித்ததை பார்த்தாள்
எந்தன் கண்களை பார்த்தாள்
காதலை வார்த்தையில் சொல்லாமல்
அவளது பார்வையில் வைத்தாள்...

புணர்தல் இல்லாத காமம்
காமம் இல்லாத காதல்
காதல் இல்லாத அன்பு - இவையாவும்
ஒன்றென என்னையள்ளி அரவணைத்தாள்...

அவள்காட்டிய அன்பிற்கு
பரிசாய் முத்தமளித்தேன்
நான்காட்டிய காதலிற்கு
என்னை கட்டியணைத்தாள்

இதழோடு இதழ்மெல்ல சேர்த்தேன்...
முத்ததிற்குபின் கண்விழித்து பார்த்தேன்
அப்பொழுதுதான் தெரிந்தது எல்லாம்
இன்பமான கனவென்று இதயத்திற்கு..
- sure

கிரகணம்.............

நிலாவாய் உனக்கு நானிருக்க
கதிரவனாய் எனக்கு நீயிருக்க
பூமியும் நம்மிடையே பூவாய்பூத்து
நெடுநேரம் நம்மைபிரிக்க எப்படிஇயலும்?

நம்மிருவருக்கு மட்டும் கிரகணம்
நமக்குநாமே பிடித்த கிரகம்
உன்னுள் நிரந்தரமாக நீயென்னை
விழுங்கியிருக்க பின்னெப்படி சாத்தியம்?

வஞ்சமின்றி நஞ்சை உமிழும்
அரவமென்னை கொஞ்ச கொஞ்சமாய்
வாயில் கவ்விபிடித்தாலும் உன்னால்
உயிர்பெறும் நான்எப்படி மறைவேன்?
- sure

அப்படியென்ன பிடிக்காது...?

எனக்கு பிடிக்காதது
உனக்கு பிடித்திருக்கிறது...
உனக்கு பிடிக்காதது
எனக்கு பிடித்திருக்கிறது...
இருந்தாலும் நமக்குள்
ஒருவரை ஒருவர்
மிகவும் பிடித்திருக்கிறது..
அப்படியென்ன பிடிக்காதது...?
என்னை எனக்கு
பிடிக்கவில்லை...
உன்னை உனக்கு
பிடிக்கவில்லை...
- sure