Pages

மழை... நீ... நான்...

மழையே!!!
நான் உன்னை
என்றும் காதலிப்பேன்
நீ என்னை
இன்று காதலிக்காவிடினும்...

நான் உனக்காகவே
ஏங்கி காத்திருக்கேன்
நீ என்னை
காணவராமால் போனாலும்...

கொட்டும் மழைக்காலத்திலே
நீ வருவதில்லை
கோடையில் பின்னெப்படி
நீ வரக்ககூடும்...

நம்பிக்கை மட்டும்தான்
என்னுள் நிலையாய்
நீயுமென்னை கண்டிட
ஒருநாள் வருவாயென...

மழையை மட்டும்
நான் காதலிக்கவில்லை
மங்கை உன்னையும்
தான் காதலிக்கிறேன்...

இதயத்தில் மொட்டுவிட்டு
இதழில் பூக்காமால்
இன்றுவரை என்னுள்
இருக்ககூடும் காதல்....

உள்ளத்தில் விதையாகி
உதட்டில் விருட்சமாய்
உன்னிடம் சொல்லதுடிக்குது
உன்மீதான என்காதல்...

என்றாவது உன்னிடம்
சொல்லி விடக்கூடும்
அன்று உன்அன்பை
முத்தத்தில் சொல்லிவிடு...

எனக்கு மழையே
வேண்டாம் வாழ்நாளில்
எனக்கு கன்னத்தில்
நீகொடுக்கும் ஒன்றேபோதும்...

சிறுதுளி பெருவெள்ளம்
உந்தன் ஓர்முத்தமோ...
எந்தன் நெஞ்சிக்குள்
பெய்திடும் மாமழை...

வான்மழையும் என்னை
நனைக்காமல் பொய்க்ககூடும்
உன்அன்பின் மழையோ - என்னை
நனைக்காமல் போகுமா?
- sure

என்னை தீண்டா முத்தம்...

பேசும்போது நீயெனக்கு
அளித்திட நினைத்து
பரிமாறி கொள்ளபடாத
முத்தங்களின் கணக்கை...

உரையாடி முடிந்தபின்
அலைபேசிக்கு மொத்தமாக
வாரிவாரி வழங்குகிறாய்..
எனக்கு கொடுத்திருந்தாலோ
ஒன்றினை மட்டும்தானே
கொடுத்து இருப்பாய்...
அலைபேசியை தீண்டும்
முத்தங்களின் எண்ணிக்கையோ
எல்லையற்று படருகிறது...

உந்தன் தீண்டாத
முத்தமும் என்னை
மெய்மறக்க செய்கிறதடி...
- sure

கட்டைச்சுவர் சுவரும் தாஜ்மஹால் தான்



நம்முடைய மனதுக்குள்

கொண்ட காதல்
மட்டும் இல்லையடி
பெண்ணே...
வானம் வரை உயராமல்
பாதியிலே நின்றுபோனது
உனக்காக நித்தம்
காத்திருந்த இடமும்தான்...

இன்றும் நம் இதயத்திற்குள்
வாழ்ந்திட்ட காதலை
மறவசெய்யாத ஓர்
உன்னதமான அழியாத
நினைவின் சின்னமாக
இப்பூமியில் மற்றொரு
தாஜ்மகாலை போன்று
என்கண்களுக்கு...
இந்த கட்டைசுவர்...

நாணம்

cute girl

உன்னுடைய அலைபேசி
உந்தன் வெட்கத்தோடு
போட்டி போடுகின்றதோ
இல்லை...
உன்னிடம் கற்றுக்கொள்கிறதோ!!!

உந்தன் கன்னம்
சிவக்கும் முன்பே
அணைந்து போகின்றது
எந்தன் முத்தங்களை
பெற்றவுடனேயே.....

அன்பு...காதல்... காமம்...

நீ!!!
அலைமகளோ
மலைமகளோ
கலைமகளோ
என்றுதெரியாது?

உன்இதயத்திற்குள் அவனை மெல்லஅடைத்து
உன்இல்லத்தின் கதவினை திறந்துவைத்திருக்கிறாய்
தென்றல்காற்றாய் உன்னை வந்துசேர்ந்திட
அவன்மனதுக்குள்ளும் இருக்கும் ஆசையையுணர்ந்து...

காற்றினைவிட நீஅவனுக்கு ஏந்திட
மென்மையானவள் என்று நிருபிக்கவும்
காற்றினையும் கையில் பிடிக்கமுடியும்
என்பதனை செயலில் செய்துகாட்டவும்

அவனிரு கரங்களில் அள்ளியெடுத்து
உன்னை அரவணைத்து சுமக்கசொல்கிறாய்
உன்செவியில் அவன்குரலில் இதமாய்
மெல்லிசை பாடலை ஒலிக்கசொல்கிறாய்...

கையில் மிதக்கும் கனவாநீ
கை கால் முளைத்த காற்றாநீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே !
நுரையால் செய்த சிலையநீ 

ஒருபாடல் உன்னை பார்த்து அவன்பாட
மூன்றுபாடல் அவனை பார்த்து நீபாடுகிறாய்
ஒரேமுறை பார்த்தாலே போதும் என்கிறாய் - அவன்
உன்அன்பை என்னவென்று எண்ணிவியந்து போகிறான்

// நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு // என்கிறாய்....
//ஒன்றா இரண்டா ஆசைகள் எல்லாம் சொல்லவே// என்கிறாய்
//உனக்கென நான் எனக்கென நீ... நினைக்கையில் இனிக்குதே// என்கிறாய்...
எல்லாம் கனவாக வந்துசென்றாலும் மகிழ்ச்சியென்கிறாய்...

இருவரும் பார்க்காமல் போனாலும் போகக்கூடும்
ஒருவரையொரு புரிந்துக்கொண்டது மட்டும் போதுமென்கிறாய்
ஒருமுறைகூட வாழ்வில் சந்தித்தது இல்லை
மறுமுறை வாழ்வில் சந்திப்பதைபற்றி சிந்திப்பதற்கென்கிறாய் ...

நீயொரு பெண்ணாக
அவனொரு ஆணாக
உங்கள் உணர்வுகள் - இடம்மாறிக்கொண்டு
உங்கள் மனதுக்குள்....

வா(ட்)டியது மனம்...

பெரிய மேம்பாலம்
சிறிய துவாரம்
அழகிய மைனாவின்
உயரிய கூடு...

பலநாட்களுக்கு முன்பு

பிறந்திருக்க வேண்டும்
அந்த மைனாகுஞ்சு...

இன்றுதான் முதன்முறையாக

பறந்திட முயற்சியும்
செய்திருக்க வேண்டும்...

சிறகை விரித்து

மெல்ல பறந்தது
நெரிசல் நிறைந்த
சாலைக்கு மேலே...

மேலும் முடியாமலோ

பறக்க தெரியாமலோ
சாலையின்மீதே விழுந்துவிட்டது
கண்ணிமைக்கும் நேரத்தில்...

இரண்டு வாகனம்

மட்டும் ஒவ்வொன்றாய்
அதன்மேலே ஏறாமல்
எப்படியோ சென்றது...

என்னுடைய வாகனம்

பக்கத்தில் கடந்தது
மெதுவாக அதற்குள்
என்னையும் நகர்த்திவிட்டது...

என்மனம் இன்னும்

கடக்காமல் அங்கேயே!!!
அதனுடைய நிலையெண்ணி
நான் செய்வதறியாது...

வாகன நெரிசலிருந்து

தொலைந்து வந்தது
வாகனம் மட்டுமே - என்னிதயமோ
தொலைந்தது அவ்விடமே...

மீனும் நீரும்.. நானும் நீனும்

மீன் நீரிடம் சொல்லியது....
நான் அழுவது
tamil Kavithai
தரையில் இருக்கும்
மனிதர்களுக்கு அல்ல
உன்னால் வாழும்
உனக்கும் தெரியாதென்று....

நீர் மீனிடம் சொல்லியது...
நீ அழுவது
எனக்கு புரியும்
கண்டிப்பாக... ஏனெனில்!
நான் வாழ்வது
வேண்டுமானால் உன்னோடு...
நீ வாழ்வதோ
என் இதயத்திலென்று...

அப்படிதான்....
நான் எழுதுவது
மற்றவர்களுக்கு கூட
புரிகிறதே உனக்கு
புரியாமல் போனதேனோ?
என்றிருந்தேன் எனக்குள்...

இன்றுதான் தெரி(ளி)ந்தேன்
உன் இதயத்தில்
வாழும் என்னை
எப்படி நீயறிந்துகொள்ளாமல்
விலகி இருக்ககூடுமென்று...

இது ஒரு குறுஞ்செய்தியின் தாக்கம்...

நிலவின் நேசம்... அங்கே என் வாசம்...

நிலவின் ஒளியாக
என்னைவந்து சேருகிறாய்
உன்னாலே
நானும் என்வரிகளும்
புத்துயிர் பெறுகிறோம்
தென்றலாய் பிறக்கிறோம்.

என்னை நீகாண
நிலாவாய் நித்தம்
வானிலும் என்மனதிலும்
உலா வருகின்றாய்
நான் உன்னை
கண்டு ரசித்திட...

உன்னை நான்காண
தென்றலாய் மாறி
பூக்களிலும் மேகத்திலும்
கலந்து காற்றாய்
வீசி வருகிறேன்
உன்னை தீண்டிட...

நிலவாய் என்னை
நோக்கி நீ
விண்ணிலிருந்து பயணிக்கிறாய்...
தென்றலாய் உன்னை
எதிர்நோக்கி நான்
மண்ணிலிருந்து பயணிக்கிறேன்...

மௌன பேச்சுவார்த்தை..

நித்தம் நித்தம்
இனி வேண்டும்
நமக்குள் சண்டை
உன்னுடன் பேசும்
தருணத்திலும் சரி
உன்னை நினைக்கும்
எல்லா பொழுதிலும்
சமரசத்தை மட்டும்
உனக்கு தொடர்ந்து - என்வாழ்வில்
வழங்கிட நினைத்துக்கொண்டேன்...

உன்குரல் என்றால் தேன்....

தேன் என்றால் இனிப்பு ஞாபகம்
இனிப்பு என்றால் உந்தன் ஞாபகம்
நீ என்றால் உன்நினைவுகள் ஞாபகம்
என்றென்றும் கெட்டுபோகாத தேன்போல
என்றும் என்மனதுக்குள் உன்நினைவுகளும்
இனித்து நாளுக்குநாள் பெருகிக்கொண்டே...

- sure