Pages

நான் ஒரு முட்டாளுங்க...

தினம் தினம்
உந்தன் விழியாலும்
உந்தன் மொழியாலும்
என்னை புத்தியற்றவனாக
ஆக்குகின்றாய்...
இன்று ஏனோ?
புதிதாய் என்னை
மடையனாக மாற்றுவதுபோல்
முட்டாள்தின குறுஞ்செய்தியை
அனுப்புகின்றாயே?

- sure

அழைப்புமணி...

உன்னை நான்
பெயர்சொல்லி அழைக்குபோது...
என்னை நீ
திரும்பிபார்க்காமல் அலட்சியம்செய்து
சென்றாலும்...
உன்பெயரை உச்சரித்ததை
உலகின் இன்பமாய்
மனதுக்குள் நினைப்பதை
போன்றே...
கைபேசியில் என்அழைப்பை
நீதீண்டாமல் போயிருந்தாலும்
உன்னைநான் அழைக்க
அழைப்புமணியாய்...
ஒலித்த உன்விருப்பமான
திரைப்பாடல் உன்குரல்
கேளாதகுறையை என்னுள்
தீர்க்குதடி...
- sure

அமாவாசை...

அமாவாசை!!!
நேற்று விண்ணில்
மட்டுமல்ல நான்
கண்டது!
எந்தன் அலைபேசியிலும்
கண்டேன்...
நிலா இல்லாத
வானம் போன்றே
உந்தன் அழைப்பும்
குறுச்செய்தியும் இல்லாமல்
வெறுச்சோடி போனது
கைபேசியும்....

- sure

மெளனம்...

உனக்கு மட்டும்தான்
மெளனம் பேசதெரியுமென்று
எந்தன் மனதுக்குள்
நினைத்திருந்தேன் இன்றுவரை
ஆனால்
உந்தன் அலைபேசிக்கும்
நன்றாக பயிற்றுவித்திருக்கிறாய்
என்னோடு பேசாமல்
மெளனம் காத்திடும் - யுக்திகள்
எவ்வாறென்று என்பதனை...
-sure

தவிப்பும்... இறப்பும்...

நான் பயணிக்கும்
பேருந்தும் போக்குவரத்து
நெரிசலில் சிக்கிதவிப்பது
போன்றே என்மனதும்
பலநேரம் அலைபாய்கிறது...
உனக்காக நான்
அனுப்பிய குறுச்செய்திக்கு
மறுபதில் உன்னிடமிருந்து
எதிர்பார்த்து வராதசமயங்களில்...
சிலநேரங்களில்...
நீபார்த்தும் பதிலேதும்
அனுப்பாமல் போனாலும்
போக்குவரத்தின் விபத்தில்
சிக்கிஇறந்து போயிருக்க
கூடுமென்று எண்ணியே
என்மனம் என்னை
சமாதானம் செய்துவைக்கிறது...

என் விடியல்...

அன்று...
பொழுது புலர்ந்ததை
சேவல் கூவியது
கேட்டு ரசித்து
துயில் எழுந்தேன்!

பின்....
கடிகாரத்தின் மணியோசை
காதினில் ஒலித்திடவே
விடியலை அறிந்து
தூக்கத்தை கலைத்தேன்!!

இன்றோ....
உந்தன் குறுஞ்செய்திகள்
வந்து எழுப்பினால்
மட்டுமே பொழுது
விடிவதாய் உணருகிறேன்!!!

ஆனால்...
மூடுபனிகாலத்தில் கூட
பொழுதுகள் அதிகாலையில்
விடிந்தது சுகமாய்...
இளவேனிற்காலத்தில் ஏனோ
பொழுதுகள் விடிய
தாமதமாகி போகின்றது...
சிலநாட்கள் விடியாமலே
போவதையாவது நீயறிவாயோ?

- sure

சொல்லாத வார்த்தைகள்...

இவ்வுலகம் நிலவில்லாத வானமாய்
இருண்டு நீண்டு போனதுபோல்...
உன்னுலகமும் கண்களும் கண்டிப்பாய்
இருண்டு தூங்காமல் போயிருக்ககூடும்...

உன்அலைபேசியும் என்குறுஞ்செய்திக்கு காத்திருந்து
உறக்கத்தை இழந்திருக்ககூடும்...
என்அலைபேசியும் என்மனமும் அனுப்பாது
இறந்துபோவதை நீயறிவாயோ?

என்மனதில் என்னவென்று நீயென
உன்னிடம் சொல்லிட எண்ணம்தான்
உன்மனதில் வண்ணத்தை படைத்தால்
என்மனம் தாங்கும் ஒருவேளை
பின்னத்தை கொடுத்தால் தாங்குமோ?

- sure

என்னுயிர் பிரியுதடி...

எந்தன் அலைபேசியில் புதிதாய்
எனக்குநீ அனுப்பும் குறுஞ்செய்திகளை
சேகரிக்க இயலாமல் முன்புநீ
என்றோ அனுப்பிய குறுஞ்செய்திகளை
ஒவ்வொன்றையும் நானாக நீக்கும்போது
என்மனதுக்குள் நடைப்பெறும் போராட்டத்தையும்
உயிர்விடுவதையும் எந்தவகையில் நீயறியக்கூடும் - நான்
வார்த்தையில் இவ்வாறு சொல்லாவிடின்...

அப்படியிருக்க பின்னெப்படி சாத்தியம்
எந்தன் உயிர்தோழியே உன்னை
என்மனதுக்குள் இருந்து நானாக
அகற்றிட நினைப்பது என்வாழ்வில்?
அகற்றிவிட நினைத்தாலும் என்னால் - ஒருவேளை
இம்மண்ணில் உயிர்வாழ முடியுமா?
- sure

என்னுள் நீ...

என்னுயிர் தோழியே...

ஓன்றா? இரண்டா? நீயென்றால் எனக்குள் ஞாபகம்வர
எத்தனையோ உண்டு எதைச்சொல்லி எதை விடுவேன்...

கண்களை மூடி நான் சுவாசிக்கும் காற்றும் நீயல்லவா...
கண்களை திறந்து நான் வாசிக்கும் கவிதையும் நீயல்லவா....

கண்களை மூடி நான் மெய்மறக்கும் இசையும் நீயல்லவா...
கண்களை திறந்து நான் ரசிக்கும் மழையும் நீயல்லவா...

கண்களை மூடி நான் கேட்கும் அலையோசையும் நீயல்லவா..
கண்களை திறந்து நான் படிக்கும் அலைபேசியும் நீயல்லவா...

கண்களை மூடி நான் தூங்கும் காலையும் நீயல்லவா...
கண்களை திறந்து நான் வியக்கும் மாலையும் நீயல்லவா...

கண்களை மூடி நான் தேடும் நினைவும் நீயல்லவா...
கண்களை திறந்து நான் காணும் கனவும் நீயல்லவா...

கண்களை மூடி நான் நினைப்பதெல்லாம் நீயல்லவா
கண்களை திறந்து நான் காண்பதெல்லாம் நீயல்லவா....

- sure

இன்று போல் என்றும் இருக்குமா?

பிறந்திருக்கும் புத்தாண்டில் மனதுக்கு
பிடித்தவர்களோடு பேச நினைத்தாலே
உள்ளம்தானாக விண்ணில் பறக்கும்...

இருவரும் பேசும் சமயத்திலோ
விண்ணும் இடிந்து விழுந்தாலும்
நெஞ்சம் அறியாமல் போகும்...

தொலைவில் இருந்தாலும் பேசும்
மொழிதனில் அகம் மகிழ்ந்து
அமிர்தமும் சுவையற்று போகும்...

பக்கத்தில் அமர்ந்து பாயசமுண்டு
புத்தாண்டை கழிப்பதை விடவும்
இதயத்திற்குள் சந்தோஷம் பொங்கும்...

உதட்டில் வார்த்தைகளாய் அல்லாது
உதிர்த்து விட்ட மெளனமல்லாத
மொ(மு)த்தபூவும் தேனாய் இனிக்கும்...

செவியில் உணர்ந்த உண(ர்)வு
உதிரத்தில் கலந்து உடல்முழுதும் - என்றென்றும்
பரவசம் அடைய செய்கிறது....

- sure