Pages

பாலைவனமாகும் இந்தியா


இந்திய நிலபரப்போடு ஒப்பிடும்போது அதில் சுமார் 1/3 சதவிகித நிலத்தை மட்டுமே கொண்ட பாலைவன நாடுதான் சவுதி அரேபியா…

இந்த பூமியில் நதிகளே இல்லாத நாடாக கூறப்படும் மத்திய கிழக்கில் அமைந்துள்ள சவுதி அரேபியாவில் இதுவரை தண்ணீர் பஞ்சம் ஏற்பட்ட வரலாறே இல்லை,

பொதுவாக இதுபோன்ற வளைகுடா நாடுகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் வெப்பம் சர்வசாதாரணமாக 50°C இருக்கும்… சவுதி உள்ளிட்ட பல நாடுகளில் மழையின் அளவும் மிக குறைவான அளவிலேயே இருக்கும். ஈராக், சிரியாவில் ஓடும் டைகரீஸ் .நதி மட்டுமே வளைகுடாவின் வடக்கே ஓடும் பெரிய நதியாகும்…

சவுதியில் நிலத்தடி நீர் என்பது கானல் நீர் போலதான் கிடைப்பது அறிதிலும் அறிது, எங்கு தோண்டினாலும் கச்சா எண்ணெய் மட்டுமே கிடைக்கும். அங்கு வசிக்கும் மக்களின் குடிநீர் மற்றும் அத்தியாவிசய தேவைக்கான தண்ணீரை அந்நாட்டு அரசே கடல் நீரையே சுத்தம் செய்து சேகரித்து வைத்து மக்கள் தேவைக்காக விநியோகித்து வருகிறது… இதற்க்காக உலகிலேயே மிக அளவில் பெரிய தண்ணீர் சேகரிக்கும் பல தொட்டிகளை கட்டி அதில் தண்ணீரை சேகரித்து வைத்துள்ளது சவுதி அரேபியா…

வளைகுடா நாடுகளில் பெரும்பாலும் மன்னர் ஆட்சிதான் நடைபெறுகிறது, ஆனால், மக்கள் திருப்தியாக வாழ்கிறார்கள். செல்வத்தில் கொழிக்கிறார்கள்… அந்நாட்டு மக்களின் தேவை உடனடியாகப் பூர்த்தி செய்யப்படுகிறது. ஜனநாயக நாடு என்று சொல்லிக்கொண்டு மக்கள் பணத்தை சுரண்டும் நிலை கிடையாது…,

சவுதிஅரேபியா  மட்டுமல்லாமல் பஹ்ரைன், அமீரகம், ஓமன், ஏமன், கத்தார் போன்ற நாடுகளிலும் நிரந்தரமான ஆறுகள் ஏதும் கிடையாது எப்போதாவது மழை பெய்தால் திடீர் ஆறுகள் உருவாகும்.

ஆனால் பல நதிகளையும் பல லட்சம் ஓடைகளையும் கொண்ட இயற்க்கை வளம் அதிகம் கொண்ட நமது இந்திய நாட்டில் தண்ணீர் பஞ்சம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது...

பாலைவன நாடான சவுதியிலேயே தண்ணீர் பஞ்சம் ஏற்படாத போது வளமிக்க நமது நாட்டில் மட்டும் ஏன் இப்படியான நிலை

#இதற்கு_யார்_காரணம்...? 
@sure4an

No comments:

Post a Comment