Pages

உறவின் வரம்

natpu, Kavithai, tamil
முடிவில்லா வானில் நீ பறக்க
முகவரியாய் தென்பட்ட நட்பு,
முதல் இடம் நீ பிடிக்க
முதல் எழுத்தில் இடமின்றி
உன் வெற்றிக்கு வேர்ராகிடும் நட்பு

உடன் பிறந்தும் உடல் சுமக்கும் எண்ணங்கள் வேறு
எங்கோ பிறந்தாலும் உன் உணர்வுகளை
கட்டி அணைக்கும் பாரு,
உறவொன்று புதைய... உடன் உன்
எண்ணம் தேடுமோ இறப்பு,
நிழல்துடிக்கும்போது இருளுக்குள் ஒளிதேடி
போராடும் அது நட்பு

எதிர்பார்போடு உருவாக்கபடுவதே இப்பிறப்பு
எதிர்பார்ப்பின்றி உறவுக்குள் உரமாகும் நட்பு,
கடவுளுக்கும் உறவுகள் பல உண்டு -இருந்தும்
அவன்கூட ஏங்குகிறான் எமக்கில்லையே என்று

உயிருக்குள் ஓர் உயிர் வளர்த்தாலும் வெளியானால்
மாற்றங்கள் வருவது உண்டு,
ஜென்மத்தின் புனிதமாய் கல்லறைவரை வரும்
வரம்வேறேது ?
ஒவ்வொரு உறவுக்குள்ளும் விதைத்தால் போதும் நட்பு
மௌனமின்றி மனங்கள் பேசும் உறவை வாழவிடும் நட்பு

No comments:

Post a Comment