Pages

கிரகணம்.............

நிலாவாய் உனக்கு நானிருக்க
கதிரவனாய் எனக்கு நீயிருக்க
பூமியும் நம்மிடையே பூவாய்பூத்து
நெடுநேரம் நம்மைபிரிக்க எப்படிஇயலும்?

நம்மிருவருக்கு மட்டும் கிரகணம்
நமக்குநாமே பிடித்த கிரகம்
உன்னுள் நிரந்தரமாக நீயென்னை
விழுங்கியிருக்க பின்னெப்படி சாத்தியம்?

வஞ்சமின்றி நஞ்சை உமிழும்
அரவமென்னை கொஞ்ச கொஞ்சமாய்
வாயில் கவ்விபிடித்தாலும் உன்னால்
உயிர்பெறும் நான்எப்படி மறைவேன்?
- sure

அப்படியென்ன பிடிக்காது...?

எனக்கு பிடிக்காதது
உனக்கு பிடித்திருக்கிறது...
உனக்கு பிடிக்காதது
எனக்கு பிடித்திருக்கிறது...
இருந்தாலும் நமக்குள்
ஒருவரை ஒருவர்
மிகவும் பிடித்திருக்கிறது..
அப்படியென்ன பிடிக்காதது...?
என்னை எனக்கு
பிடிக்கவில்லை...
உன்னை உனக்கு
பிடிக்கவில்லை...
- sure

என்னோடு நீ...

தமிழ் கவிதை
வான்மதியே!!!
என்னுடைய பகல்நேர
பேருந்து பயணங்களிலும்
என்னருகில் அமர்ந்து
எந்தன்தோள் சாய்ந்து
நீயில்லாத வானத்தை
என்னிடம் கண்ணில்காட்டி
காதில் ரகசியம்கூறி - விண்ணை
ரசிக்க சொல்ன்கிறாய்...
நான் நடந்துசெல்லும்
சாலையின் ஓரங்களிலும்
என்ஒற்றை விரல்பிடித்து
என்னோடு நடைபயில்கின்றாய்
சிலசமயம் உன்னிடையை
என்கைகள் வளைத்து
இதமாய் அரவணைத்து - நடக்கும்படி என்னை நீயே 
மாற்றுகின்றாய்....
நான் உண்பதற்கு
செல்லும் உணவங்களுக்கு
எனக்கு முன்னால்
போட்டியிட்டு செல்ன்கிறாய்...
உனக்கு பிடித்ததை
எனக்கும்..
எனக்கு பிடித்ததை
உனக்கும்...
கொண்டுவர சொல்லி
அன்போடு உணவையும்
ஊட்டிவிட்டும் ஊட்டிவிட - வார்த்தையில்
சொல்லியும் மகிழ்கின்றாய்...
வான் தொலைவில்
நீயிருக்கும் போதே
இத்தனை மாற்றங்களை
என்னுள் புகுத்துகின்றாய்...
என்னை காண்பதற்கு
ஒருவேளை பூமிக்கு
இறங்கி வந்தால் - என்னவாகி
போவேன் உன்னால்?

நான்... கண்களா? இமையா?

தோழியே!
உலகத்தை நீ பார்க்க
உண்மையான நட்பாய்
உனக்கு ஆயிரம்
கண்கள் இருக்கலாம்...

அதில் நானுனக்கு
வலதுகண்ணோ? இடதுகண்ணோ?
தெரியாது? ஒருவேளை
எத்தனை கண்கள்
இருந்தாலும் அத்தனை
கண்களை காத்திடும் இமையாகவே எந்நாளும் 
இருக்க ஆசைப்படுகிறேன்...

பெளர்ணமி நிலவே!!!

பெளர்ணமி நிலவே!!!
உன்னை நீயே
எனக்கு அறிமுகம்
செய்கிறாய்...
இன்று விண்ணைநோக்கு
உன்மனதில் இருக்கும்
என்னை காணலாம்
என்கிறாய்...

மொட்டைமாடியில் மதியை
இந்நாள்வரை நின்றுமட்டுமே
ரசித்திட்ட நான்...
முதல்முறையாய் வாழ்வில்
துகில்கொண்டே கண்டிட
எண்ணினேன் நான்...

வானத்து மங்கையே
உனக்கு துணையாக
நீயெனக்கு இணையாக
இருவரும் மகிழ்வோடு
கொஞ்சி மகிழ்ந்திடும்
நினைவுகளோடு நான்...

அரைநிர்வாண கோலமாய்
கைச்சட்டை இல்லாமல்
கையில் ஏடும்பேனாவும்
மனதில் கனவுகளையும்
கொண்டு காதல்புரிய
உன்னை காணவந்தேன்...

வெண்ணிலவே நீயும்
வெட்கம் கொண்டாயோ?
மேகமென்னும் சேலையின்
முந்தானையே எடுத்து
முகத்தினை மூடி
என்னைகாண மறுக்கிறாயே...

பாஞ்சாலியின் மானத்தை
காக்க சேலையை
கொடுத்தவன்...
உன்னுடைய நாணத்தை
மறைக்கவும் முகிலை
அனுப்புகிறானோ?

உனக்கு ஆடையை
வாரிதருவது அந்த
மாயகண்ணனின் லீலையோ?
என்மனத்துக்கு பிடித்த
பரந்தாமனும் இச்செயலால்
பிடிக்காமல் போகிறான்...
- sure

கனவாய் மறையாத நினைவுகள்...

இரயில் நிலையம் என்றாலே உந்தன் ஞாபகமே
இரயில் வண்டி பயணமென்றாலும் உந்தன் ஞாபகமே
இருக்கையில் சன்னலோரம் அமர்ந்தாலும் உந்தன் ஞாபகமே
இடமில்லாமல் கதவோரம் நின்றாலும் உந்தன் ஞாபகமே...

இருசக்கர வாகனம் என்றாலும் உந்தன் ஞாபகமே
இருவரும் ஒன்றாக பயணித்ததும் ஞாபகமே
இயற்கையை இருவர் ரசித்ததும் ஞாபகமே
இரவில் இன்னிசை கேட்டாலும் உந்தன் ஞாபகமே...

ஆலய தரிசனம் என்றாலும் உந்தன் ஞாபகமே
ஆலயத்தில் பிரகாரம் வலம்வந்தாலும் உந்தன் ஞாபகமே
ஆண்டவன் அருள் என்றாலும் உந்தன் ஞாபகமே
ஆன்மாவை ஒருநிலை படுத்தினாலும் உந்தன் ஞாபகமே...

அதிகாலை என்றாலும் உந்தன் ஞாபகமே
ஐந்துமணிக்கு எழுந்தாலும் உந்தன் ஞாபகமே
ஆதியை கண்டாலும் உந்தன் ஞாபகமே - எந்தன்
அருகினில் நீயில்லாவிடினும் உந்தன் ஞாபகமே...

ஞாபகங்கள் தொடரும்...

- sure

தமிழ்

"என் தாயும் நீயே!
என் தோழியும் நீயே!
என் காதலியும் நீயே!
என் மனைவியும் நீயே!
என் சேயும் நீயே!
என் வாழ்வே நீயே!!!”
எனக்கு மட்டும் என்றில்லை
எத்தனையோ உள்ளங்களுக்கும்...
- sure

நண்பர்கள்..

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள்.
இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்..
- sure

என்னுள் நடந்த

நீ பிரிந்த இந்த நொடி

என்னுள் நடந்தன சுனாமி

நீ பேசாத இந்த நொடி

என்னுள் நடந்தன பூகம்பம்

நீ எப்போது பேசுவாய் என்று

இந்த சுனாமியையும்

பூகம்பத்தையும்

தாங்கி கொண்டு நிற்கிறேன்...
- sure

உனக்காக காத்திருப்பதே

உன்னோடு பேசிய நாட்களை விட

உன்னை விட்டு பிரிந்த நாட்களே அதிகம்

உன்னோடு சிரித்த நாட்களை விட

உன்னை நினைத்து அழுத நாட்களே அதிகம்

உன்னோடு பழகிய நாட்களை விட

உன் நினைவுகளை நினைத்த நாட்களே அதிகம்

உனக்காக காத்திருப்பதே தனி சுகம்தான்....
- sure