Pages

யாராலும் உணர முடியாது

நில‌ம்
நீர்
நெருப்பு
காற்று
ஆகாய‌ம்

இது போல் தான் நம் ந‌ட்பு
யாராலும் உண‌ர‌ முடியாது
எப்ப‌டி தோன்றிய‌து என்று.....
- sure

கண்டுபிடிக்க முடியாது

உறையும் பனிக்குள்

எரியும் நெருப்பு

கண்டுபிடிக்க முடியாத

சரித்திரம்

உன் மனதைப் போல்

யாராலும் கண்டுபிடிக்க

முடியாது.....
- sure

உன்னை நினைக்கும் போது

வண்ணக் கனவுகள்

பல நினைவுகள்

சில உண்மைகள்

நடக்கும் நிஜங்கள்

கற்பனையின் சம்பவங்கள்

எதிர்பார்க்கும் நிகழ்வுகள்

தொலைந்து போகும் நியாபகங்கள்

மறக்காத சிந்தனைகள்

எழுதாத கவிதைகள்

இவை எல்லாம் விட

பெண்ணே உன்னை நினைக்கும் போது

இதயம் துடிக்கிறது

120 தடவை நிமிடத்திற்கு...
- sure

ஒளித்து வைத்த வார்த்தை

குமுறியது உள்ளம்

நெருடியது நெஞ்சம்

மலர்ந்தது மனம்

நீ என்னை திரும்பி பார்த்த போது

சொல்லி முடிக்கும் முன்

சொல்லாத வார்த்தையால்

சொல்லிச் சென்றாய்

இனிமேல் பார்க்காதே என்று

வீழ்ந்தது நினைவு

எரிந்தது கனவு

ஆறுதல் சொல்லியும்

ஆறாத நெஞ்சம்

இன்னும் உயிர் வாழ்கிறது

எதையோ தேடி

நீ ஒளித்து வைத்த வார்த்தையை !!!!!!
- sure

எழுதப்பட்ட விதி

கனவோடு சென்றாலும்

கரையாமல் சென்றாலும்

நினைவோடு வரும்

நீ கண்ட கனவு

முறையாகப் பேசினாலும்

முறையற்றுப் பேசினாலும்

முடிந்த பின் தெரியும்

முனைப்பான தெளிவு

எது வேண்டும் என்றாலும்

எது வேண்டாம் என்றாலும்

கடைசியில் கிடைப்பது

உனக்கு எழுதப்பட்ட விதி !!!!!!
- sure

மெளனம்

கல்லால் அடித்து கூட

உன்னை காயப்படுத்த முடியும் - ஆனால்

அது நீ சொன்ன

வார்த்தையை விட பெரிதாகாது !

கத்தியால் குத்தி கூட

உன்னை இரத்தம்

சிந்த வைக்க முடியும் - ஆனால்

அது நீ காட்டிய

மெளனத்தை விட பெரிதாகாது!

நீ சொல்லும் வார்த்தையை

மெளனத்தின் மூலம் அறிய

மெளன மொழியை கற்கிறேன்

மெளனமாக !!!!!!!!!!!!
- sure

எதுவும் இல்லாத இடத்திலும்

என்றோ வரும் என் பிறந்தநாளுக்காக

இன்றே அலைகிறாய் ஒரு பரிசு வாங்க

தேடிய இடமெல்லாம் கிடைத்தது

எனக்கு பிடிக்காதவை மட்டுமே

முகத்தில் தோன்றிய ஏக்கம்

முடிவில் சொன்னாய் எதுவும் இல்லையென்று

எதுவுமே இல்லாத இடத்திலும்

உன் அன்பு இருக்குமே எனக்காக மட்டும்....
- sure

எப்பொழுது வருவாய் நீ

உன் பிரிவைக் கண்டு

தவியாய் தவித்தேன்

என்னையே வெறுத்தேன்

உன் வரவையே நாடினேன்

உன் நினைப்பையே நேசித்தேன்

விநாயகரிடமும் சொல்லி விட்டேன்

எப்பொழுது வருவாய் நீ !!!!!
- sure

காதல்

இது காலத்தின்

விதி அல்ல

கல்லறையின்

முதல் அடி..
- sure

சிரிப்பின் சப்தம்

உன் சிரிப்பின் சப்தம்

என் காதில் இன்றும் கேட்கிறது

அந்த நிமிடம் திரும்பிப் பார்த்தேன்

நீ என் பக்கத்தில் இருந்தாய்

நிழலாக !!!
- sure