Pages

Showing posts with label kavithai. Show all posts
Showing posts with label kavithai. Show all posts

பேசத் துடிக்கும் வார்த்தைகள்

பெண்ணே...!
உன்னைப் பார்க்கும் போது
பேசத் துடிக்கும் வார்த்தைகள்
மெளனமாகி விடுகின்றது.

பெண்ணே....!
உன்னை விட்டு விலகும் போது
உணர்ச்சியற்ற கால்களாய்ப்
போகின்றது.

பெண்ணே....
உன்னை நினைக்கும் போது
கவிமழையாய்ப் பொழிகிறது
என் இதயத்தில்.

பெண்ணே....
உன்னை கனவில் அணைக்கும் போது கூட‌
பூக்களாய் நினைத்து பூஜை அறையில்
பூட்டி வைக்க விரும்புகின்றேன்.

பெண்ணே....
உனைப் பார்த்து வரைந்த போது
என் உயிர் கொடுத்து
உயிர் ஓவியமாய் மாற்றிவிட்டேன்.

பெண்ணே....
உன்னை நினைத்து மரணித்த போது
என்னை ஆழமாய் விரும்பினாய்.
நான் ஆவியாய் அலைகின்றேன்.

பெண்ணே....
மறு ஜென்மம் மலரும் போது
நான் நீயாகவும்... நீ... நானாகவும்
அப்போ புரியும் என் காதல் வலி.

உறவின் வரம்

natpu, Kavithai, tamil
முடிவில்லா வானில் நீ பறக்க
முகவரியாய் தென்பட்ட நட்பு,
முதல் இடம் நீ பிடிக்க
முதல் எழுத்தில் இடமின்றி
உன் வெற்றிக்கு வேர்ராகிடும் நட்பு

உடன் பிறந்தும் உடல் சுமக்கும் எண்ணங்கள் வேறு
எங்கோ பிறந்தாலும் உன் உணர்வுகளை
கட்டி அணைக்கும் பாரு,
உறவொன்று புதைய... உடன் உன்
எண்ணம் தேடுமோ இறப்பு,
நிழல்துடிக்கும்போது இருளுக்குள் ஒளிதேடி
போராடும் அது நட்பு

எதிர்பார்போடு உருவாக்கபடுவதே இப்பிறப்பு
எதிர்பார்ப்பின்றி உறவுக்குள் உரமாகும் நட்பு,
கடவுளுக்கும் உறவுகள் பல உண்டு -இருந்தும்
அவன்கூட ஏங்குகிறான் எமக்கில்லையே என்று

உயிருக்குள் ஓர் உயிர் வளர்த்தாலும் வெளியானால்
மாற்றங்கள் வருவது உண்டு,
ஜென்மத்தின் புனிதமாய் கல்லறைவரை வரும்
வரம்வேறேது ?
ஒவ்வொரு உறவுக்குள்ளும் விதைத்தால் போதும் நட்பு
மௌனமின்றி மனங்கள் பேசும் உறவை வாழவிடும் நட்பு

இதுவே நிஜம்




நீ மட்டும்
என்னருகில்
இருந்தால்
நான் விழிகள்
மூடாமல்
உன்னையே
பார்த்துக்
கொண்டிருப்பேன்.


உன் பார்வை
என்மீது பட்டால்
நான் சுவாசிக்காமலே
உயிர் வாழ்ந்து
கொண்டிருப்பேன்


என்னைப் பெயர்
சொல்லி நீ
அழைத்தால்
குயிலே கவிதை
சொன்னாலும்
நான் அதை
வெறுப்பேன்.

நான் தூங்கும்
போதுகூட
கனவிலே நீ
தோன்ற மறுத்தால்
மறுகணமே இறப்பேன்!