Pages

எப்பொழுது வருவாய் நீ

உன் பிரிவைக் கண்டு

தவியாய் தவித்தேன்

என்னையே வெறுத்தேன்

உன் வரவையே நாடினேன்

உன் நினைப்பையே நேசித்தேன்

விநாயகரிடமும் சொல்லி விட்டேன்

எப்பொழுது வருவாய் நீ !!!!!
- sure

காதல்

இது காலத்தின்

விதி அல்ல

கல்லறையின்

முதல் அடி..
- sure

சிரிப்பின் சப்தம்

உன் சிரிப்பின் சப்தம்

என் காதில் இன்றும் கேட்கிறது

அந்த நிமிடம் திரும்பிப் பார்த்தேன்

நீ என் பக்கத்தில் இருந்தாய்

நிழலாக !!!
- sure

நிம்மதி

இதை யாரும்

தொலைக்கவில்லை

ஆனால் இன்று வரை

அனைவரும் இதைத்தேடிக்கொண்டே

இருக்கிறோம்!!!!!
- sure

அரசு

வருமுன் காப்போம் திட்டம்

வந்தபின் காக்கும் திட்டம்

வராத அளவிற்கு காப்புத் திட்டம்

அரசின் இந்த நற்செயலுக்கு கிடைத்தது

தினம் 100 பிணங்கள் ஒரு மாவட்டத்தில்...
- sure

முட்டாளின் சுயசரிதை

அன்று நான்

சேர்த்து வைத்த

10 பைசா

இன்று செல்லாமல்

போய்விட்டது...
- sure

அன்புத் தோழி

               நீ பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான்                

              உன்னையே முறைத்துப் பார்த்தேன்                            

                 நீ கேட்க வேண்டும் என்பதற்காகத்தான்                 

                    உன் பெயரை உரைக்கக் கூப்பிட்டேன்                   

       நீ என்னுடன் பேச வேண்டும் என்பதற்காகத்தான்       

                                    உனக்கு பிடித்தபடி நடந்தேன்                      

                 நீ படிக்க வேண்டும் என்பதற்காகத்தான்                 

                         இந்த கவிதையையே படைத்தேன்                        

                         படிப்பாயா என் அன்புத் தோழி!!!!!                        

கண்ணீர்த்துளி 2

அடிக்கடி அழ

ஆசைப்படுகிறேன்

நீ அதை

துடைப்பாய் என்று
- sure

கண்ணீர்த்துளி

மழை வரும் போதெல்லாம்

கதவை சாத்திவிடாதே

அது உன்னைத்தேடிவரும்

என்கண்ணீர்த்துளீயாக

கூட இருக்கலாம்...
- sure

உன் புன்னகை

யாராலும் மொழி பெயர்க்க

முடியவில்லை

ஆனாலும் புரிகிறது

உன் புன்னகை
- sure